ஆப்நகரம்

அரியர் தேர்வு ரத்து செய்ததற்கு ஐகோர்ட் ஓகே சொல்லணும்: மாணவர்கள் பிரார்த்தனை!

அரியர் தேர்வு தொடர்பான வழக்கில் மாணவர்களுக்குச் சாதகமான தீர்ப்பு வெளிவர வேண்டும் என மதுரையில் இளைஞர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

Samayam Tamil 19 Nov 2020, 5:31 pm
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாகத் தமிழ்நாட்டில் பொறியியல் மற்றும் கலை அறிவியல் பட்டப்படிப்புகளுக்கு, இறுதிப்பருவத் தேர்வு தவிர,மற்ற பருவத்தேர்வுகளை ரத்து செய்வதாக அரசு அறிவித்தது.
Samayam Tamil அரியர் தேர்வு ரத்து செய்ததற்கு ஐகோர்ட் ஓகே சொல்லணும்: மாணவர்கள் பிரார்த்தனை!
அரியர் தேர்வு ரத்து செய்ததற்கு ஐகோர்ட் ஓகே சொல்லணும்: மாணவர்கள் பிரார்த்தனை!


மேலும் தேர்வு கட்டணம் செலுத்திய மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதாமலே தேர்ச்சி பெற்றதாகவும் அரசு அறிவித்திருந்தது. அரசு வெளியிட்ட இந்த உத்தரவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல கருத்துக்கள் எழுந்தன.

இந்த சூழலில், அரியர் தேர்ச்சி உத்தரவுக்கு எதிராகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகளும் தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வெள்ளிக் கிழமை வரவுள்ளது. மாநிலமே இந்த வழக்கின் தீர்ப்பை எதிர்நோக்கி காத்து கிடக்கிறது.

ஆன்லைன் ரம்மியால் இன்னும் எத்தனை பேர் சாகணும்?: ஐகோர்ட் கேள்வி!

இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை இறுதியில் அரியர் மாணவர்களுக்குச் சாதகமான தீர்ப்பு வெளியாக வேண்டும் என வேண்டி மதுரையைச் சேர்ந்த இளைஞர்கள் தல்லாகுளம் பகுதியில் உள்ள பூங்கா முருகன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

தேர்ச்சிக்கு எதிரான வழக்கு ஒரு நாளில் விசாரணைக்கு வரவுள்ள நிலையில் தீர்ப்பு தொடர்பாக இளைஞர்களின் நூதன வழிபாடு, பலரின் கவனத்தைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி