ஆப்நகரம்

ஊழியர்கள் மொத்த விடுப்பு: மதுரையில் முடங்கிய ஸ்விகி சேவை!

ஸ்விகி ஊழியர்களின் மொத்த விடுப்பால் மதுரையில் ஒட்டுமொத்த சேவையும் முடங்கியது

Authored bySM Prabu | Samayam Tamil 28 Nov 2022, 6:44 pm
மதுரையில் ஸ்விகி ஊழியர்களின் மொத்த விடுப்பால் சேவை முடங்கியது. டெலிவரி சேவைக்கான ஊதிய குறைப்பு குறித்து மேலாளர் உரிய விளக்கமளிக்கமால் பணி இழப்பு செய்து விடுவேன் என மிரட்டுவதாக ஊழியர்கள் குற்றச் சாட்டியுள்ளனர்.
Samayam Tamil ஸ்விகி ஊழியர்கள்
ஸ்விகி ஊழியர்கள்


மதுரை மாநகரில் ஸ்விகி நிறுவனத்தின் சார்பில் கூடல்நகர், எல்லிஸ் நகர் ஆகிய பகுதிகளில் 2 வென்டார் அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் ஸ்விகி நிறுவனத்தின் உணவு டெலிவரியின் போது, ஊழியர்களுக்கு டெலிவரி ஒன்றுக்கு 4 கிலோ மீட்டருக்கு 25 ரூபாய் பணம் அளிக்கப்பட்ட நிலையில், 5 கிலோ மீட்டருக்கு 25 ரூபாய் என ஊதிய தொகை குறைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

புதிய ஊதிய நடைமுறைகள் குறித்து உரிய விளக்கம் அளிக்காமலேயே திடீரென நடைமுறைப்படுத்தியதால், ஊழியர்களின் ஊதியம் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பெட்ரோல் விலைவாசி உயர்வால் நாள்தோறும் செலவு அதிகரிக்கும் நிலையில், பழைய ஊதிய நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என ஊழியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து இது குறித்து ஸ்விகி ஊழியர்கள் வென்டார் அலுவலக மேலாளரிடம் விளக்கம் கேட்டால் பணியில் இருந்து நீக்கி விடுவதாக அவர் மிரட்டல் விடுப்பதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. இதனை கண்டித்து மதுரை எல்லிஸ்நகர் பகுதியில் உள்ள அலுவலகத்தின் கீழ் பணிபுரியும் 100க்கும் மேற்பட்ட ஸ்விகி ஊழியர்கள் இன்று மொத்த விடுப்பு எடுத்ததனர்.

இதனால் அந்த பகுதிகளில் இருந்து ஸ்விகி டெலிவரி சேவை பாதிக்கப்பட்டது. இதுகுறித்து ஊழியர்கள் கூறுகையில், ஸ்விகி நிறுவனத்தின் பார்ட்னர்கள் என ஊழியர்களை பணிக்கு அமர்த்திவிட்டு தற்போது ஒப்பந்த பணியாளர்களை போல நடத்துகின்றனர். எங்களுக்கு முந்தைய ஊதிய நடைமுறைகளால் மாதம்தோறும் 21ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கும். ஆனால், தற்போது நடைமுறைக்கு வந்துள்ள புதிய ஊதிய முறையால் 11 ஆயிரம் ரூபாய் அளவிற்கு எங்களது ஊதியம் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது. கோரிக்கைகள் குறித்து பேசுவதற்கு கூட உரிய அலுவலகம் இல்லாத நிலை உள்ளது. எனவே, எங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்த விடுப்பு எடுத்துள்ளோம் என்றனர்.
எழுத்தாளர் பற்றி
SM Prabu
நான் மணிகண்ட பிரபு. பொறியியல் பட்டதாரி. பத்திரிகை, எழுத்தில் கொண்ட ஈடுபாடு காரணமாக கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக ஊடகத்துறையில் பயணித்து வருகிறேன். அரசியல், நீதிமன்றம், அரசு சார்ந்த செய்திகளை எழுதி வருகிறேன். செய்திகளை தாண்டி அதன் பின்புலங்களை ஆராய்ந்து கட்டுரைகளாக தந்து வருகிறேன். பத்திரிகையாளராக சாமானிய மக்களின் குரலாக ஒலிப்பதில் எவ்வித சமரசமும் இன்றி பணியாற்றி வருகிறேன். Times Internet சமயம் தமிழ் இணையதளத்தில் Senior Digital Content Producer ஆக தற்போது பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி