ஆப்நகரம்

பற்றி எரிந்த கோயில் மரம்...பக்தர்கள் அச்சம்!

மதுரையில் கோயில் வளாகத்தில் உள்ள மரம் தீப்பற்றி எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Samayam Tamil 24 Nov 2020, 7:28 pm
மதுரையில் கோயில் வாசலில் இருந்த நூற்றாண்டு பழமையான அரச மரம் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Samayam Tamil பற்றி எரியும் கோயில் மரம்


மதுரை தல்லாகுளம் பகுதியில் நூற்றாண்டு பழமையான அரச மரம் ஒன்று உள்ளது. இந்த மரத்தின் அடிவாரத்தில் சிறிய அளவில் பிள்ளையார் சிலை வைக்கப்பட்டு அந்த பகுதி மக்கள் பல ஆண்டு காலமாக வணங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் நூற்றாண்டு பழமையான மரத்தின் அடிவாரம் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியதை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர்.

திருப்பரங்குன்றம் கோயிலில் பாஜக கார்த்திகை மாத போராட்டம்!

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் துரிதமாக செயல்பட்டு அரசமரத்தில் ஏற்பட்ட தீயை அணைத்தனர்.

முன்னதாக, மரத்தின் ஒரு பகுதி காய்ந்த நிலையில் இருந்ததால் தீ மளமளவென வேகமாக பரவத் தொடங்கியது, அதனை தொடர்ந்து மாநகராட்சி ஜேசிபி எந்திரம் வரவழைக்கப்பட்டு மரத்தின் ஒரு பகுதி அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது.

வெள்ளத்துக்குத் தயாராகும் மதுரை... ஏற்பாடுகள் என்னென்ன?

தீயணைப்புத் துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில் கோயிலுக்கு வந்த சிலர் விளக்கு ஏற்றும் பொழுது எதிர்பாராதவிதமாக தீ பற்றி இருக்கலாம் என கூறப்படுகிறது. கோயிலில் உள்ள அரசமரம் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் அந்த பகுதி மக்கள், பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி