ஆப்நகரம்

எறும்பீஸ்வரர் கோயில் சொத்துகளைக் காக்க மதுரை ஐகோர்ட் கிளை கிடுக்கிப்பிடி உத்தரவு!

சோழ மன்னர்களால் கட்டப்பட்ட தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள 7ம் நூற்றாண்டைச் சேர்ந்த எறும்பீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோயில் நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதி மன்றம் மதுரை கிளை உத்தரவு பிறபித்துள்ளது.

Samayam Tamil 10 Jun 2021, 12:55 pm
திருச்சியைச் சேர்ந்த கேசவன் என்பவர் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் பொது நல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:
Samayam Tamil எறும்பீஸ்வரர் கோயில் சொத்துகளைக் காக்க மதுரை ஐகோர்ட் கிளை கிடுக்கிப்பிடி உத்தரவு!

திருச்சி திருவெரும்பூரில் சோழ மன்னர்களால் கட்டப்பட்ட 7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த எறும்பீஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயில் 600 அடி மலைக் குன்றின் மீது அமைந்துள்ளது.

தொல்லியல் துறை பாதுகாப்பில் கோயில் உள்ளது. எனினும் உரியப் பராமரிப்பு இல்லை. இக்கோயிலுக்குச் சொந்தமான நிலங்களைப் பலர் ஆக்கிரமித்து வைத்துக் கொண்டுள்ளனர். கோயிலின் தெப்பக்குளமும் முறையாகப் பராமரிக்கப்படவில்லை.

கோயில் மலையைச் சுற்றி ஆக்கிரமித்து வீடுகள், வணிக வளாகங்கள் கட்டப்பட்டுள்ளன. எனவே, உடனடியாக கோயிலைப் புனரமைக்கவும், கோயில் மலை மற்றும் சுற்றுப்பகுதியிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
48 நாட்களாக பிணவறையில் கிடக்கும் மகனின் உடல்... வாங்க மறுக்கும் தந்தை!
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், “தொல்லியல் துறை கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள ஆக்கிரமிப்பை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆக்கிரமிப்பு அகற்றம் தொடர்பாகக் கோயில் தரப்பில் அளித்துள்ள மனுவை அறநிலையத்துறை ஆணையர் முன்னுரிமை கொடுத்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது தொடர்பான நடவடிக்கையை அறநிலையத் துறை கண்காணிப்பாளர் கண்காணிக்க வேண்டும். தேரோட்டம் நடத்தற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என உத்தரவிட்டுள்ளது.

அடுத்த செய்தி