ஆப்நகரம்

டோல்கேட் ஊழியர் மீது மோதிய லாரி - மதுரையில் நடந்தது என்ன?

மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் கண்டனம் வசூலிக்கும் இடத்தில் பணியில் இருந்த ஊழியர் மீது டிப்பர் லாரி மோதிய சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

Samayam Tamil 22 Jul 2022, 9:16 am
மதுரை மாவட்டம், திருமங்கலம் நகராட்சி எல்லைக்கு உட்பட்ட கப்பலூர் சுங்கச்சாவடியில் காய்கறி லோடு வந்த சரக்கு லாரி fastag ஸ்கேன் செய்வதற்காக கட்டணம் வசிக்கும் இடத்திற்கு வந்தது. அப்போது அதற்கு பின்னால் வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து முன்னால் கட்டணம் வசூலிக்கும் இடத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியது.
Samayam Tamil Madurai Kappalur tollgate


அப்போது சுங்கச்சாவடியில் பணியில் இருந்த திருமங்கலம் சொக்கநாதபட்டியை சேர்ந்த தினேஷ் என்பவர் மீது லாரி மோதியதில் சம்பவ இடத்திலிருந்து தூக்கி வீசப்பட்டார். பின்னர், அவரை மீட்ட சக ஊழியர்கள் ஆம்புலன்ஸ் மூலம் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற திருமங்கலம் காவல் நிலைய போலீசார் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, விபத்து நிகழ்ந்த போது பதிவான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. பதைபதைக்க வைக்கும் இந்த காட்சியை பலரும் தங்களது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
2024 நாடாளுமன்ற தேர்தலில் நரேந்திர மோடி மதுரையில் போட்டி? - வேலூர் இப்ராஹிம் தகவல்!

மழைக்காலம் என்பதால் சாலைகளில் நீர் தேங்கியுள்ளது. இதனால், வேகமாக செல்லும் வாகனங்கள் பிரேக் போடும் போது சில நேரங்களில் பிரேக் பிடிக்காத சூழல் ஏற்படலால் அவ்வாறான விபத்துகளை தடுக்க வாகன ஓட்டிகள் மெதுவாக செல்ல வேண்டும் என போக்குவரத்து காவலர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

அடுத்த செய்தி