மதுரை மாவட்டம்; மதுரை பாண்டி கோயில் அருகே கலைஞர் திடல் உள்ளது. அந்த கலைஞர் திடலில் பேராசிரியர் க.அன்பழகன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கிரிக்கெட் பணிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் 1000க்கும் மேற்பட்ட கிரிக்கெட் அணிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க திட்டமிடப்பட்டிருந்தது.
அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
மேலும் அந்த நிகழ்ச்சியில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, நிதி மற்றும் மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் கோ.தளபதி, புறநகர் மாவட்ட செயலாளர் மணிமாறன், மதுரை மாநகராட்சியின் மேயர் இந்திராணி மற்றும் மூத்த திமுக நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்று விழா சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.
மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 2000-க்கும் மேற்பட்ட திமுக தொண்டர்கள் பங்கேற்றனர். மற்றும் கிரிக்கெட் வீரர்களும் அந்த நிகழ்வில் பங்கேற்று இருந்தனர்.
உதயநிதி ஸ்டாலினை வரவேற்பதற்காக மாவட்ட திமுக சார்பில் மேளதாளங்கள், பறை இசை, நாதஸ்வர கச்சேரி, பொய்க்கால் குதிரை உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. அது மட்டுமல்லாமல் திருவிழா கோலமாய் ஆயிரக்கணக்கான கரும்புகள், வாழைமரம் கொண்டு இரு புறங்களிலும் பிரம்மாண்டமான தோரணங்கள் கட்டப்பட்டு இருந்தது.
விழா துவங்கி சுமூகமாக எந்த ஒரு சலசலப்பும் இன்றி நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த நிகழ்வின் நடுவில் திடீரென மழை பெய்ய துவங்கியது.
அதனால் அங்கு கூட்டத்திற்கு வந்திருந்த தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் சற்று சலசலப்பு நிலவியது. இருப்பினும் திமுக தொண்டர்கள் அவர்களுடைய கைகளில் நாற்காலியை தூக்கி தலையில் வைத்தபடி நின்று கூட்டத்தை கவனித்தனர்.
அதைத்தொடர்ந்து அந்த நிகழ்வில் அமைச்சர் மூர்த்தி பேசிய போது, மதுரையில் நடைபெற்ற பொற்கிளி வழங்கும் நிகழ்ச்சியின் வழியாகத்தான் உதயநிதி ஸ்டாலின் அரசியலுக்கு வந்தார். வருங்காலத்தை வழிநடத்த உள்ளார். தமிழக முதல்வருக்கு உற்றத்துணையாக செயல்பட்டு வருகிறார்.
அனைத்து விதமான விழாக்களையும் நடத்த நீங்கள் வாய்ப்பு தந்தீர்கள், அதேபோல மதுரை மாவட்டத்தில் இளைஞர் அணி கூட்டத்தை நடத்த வாய்ப்பு தாருங்கள் என்று உதயநிதி ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்தார்.
விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின், 4 நாட்கள் முன்பாக தான் அமைச்சர் மூர்த்தியிடம் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யச் சொல்லி இருந்தேன் மிகப்பெரிய அளவில் ஒரு மாநாடை போல ஏற்பாடு செய்திருக்கிறார் என பேசினார்.
உதயநிதி ஸ்டாலின்காக பிரம்மாண்ட ஏற்பாடுகள் மதுரை மாவட்ட ஒருங்கிணை திமுக சார்பில் செய்யப்பட்டிருந்தது. ஆனால் மழை குறுக்கிட்டு கூட்டம் வேகமாக நிறைவடைந்ததால் மாவட்ட திமுகவினர் வருத்தம் அடைந்து உள்ளனர்.
கூட்டம் துவங்குவதற்கு முன்பாக கூடியிருந்த தொண்டர்கள் மற்றும் இளைஞர்களை உற்சாகப்படுத்த பாடல்கள் இசைக்கப்பட்டன. அதற்கு திமுகவினர் நடனமாடி தங்களுடைய மகிழ்ச்சியும் ஆரவாரத்தையும் வெளிப்படுத்தினர்.
அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
மேலும் அந்த நிகழ்ச்சியில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, நிதி மற்றும் மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் கோ.தளபதி, புறநகர் மாவட்ட செயலாளர் மணிமாறன், மதுரை மாநகராட்சியின் மேயர் இந்திராணி மற்றும் மூத்த திமுக நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்று விழா சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.
மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 2000-க்கும் மேற்பட்ட திமுக தொண்டர்கள் பங்கேற்றனர். மற்றும் கிரிக்கெட் வீரர்களும் அந்த நிகழ்வில் பங்கேற்று இருந்தனர்.
உதயநிதி ஸ்டாலினை வரவேற்பதற்காக மாவட்ட திமுக சார்பில் மேளதாளங்கள், பறை இசை, நாதஸ்வர கச்சேரி, பொய்க்கால் குதிரை உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. அது மட்டுமல்லாமல் திருவிழா கோலமாய் ஆயிரக்கணக்கான கரும்புகள், வாழைமரம் கொண்டு இரு புறங்களிலும் பிரம்மாண்டமான தோரணங்கள் கட்டப்பட்டு இருந்தது.
விழா துவங்கி சுமூகமாக எந்த ஒரு சலசலப்பும் இன்றி நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த நிகழ்வின் நடுவில் திடீரென மழை பெய்ய துவங்கியது.
அதனால் அங்கு கூட்டத்திற்கு வந்திருந்த தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் சற்று சலசலப்பு நிலவியது. இருப்பினும் திமுக தொண்டர்கள் அவர்களுடைய கைகளில் நாற்காலியை தூக்கி தலையில் வைத்தபடி நின்று கூட்டத்தை கவனித்தனர்.
அதைத்தொடர்ந்து அந்த நிகழ்வில் அமைச்சர் மூர்த்தி பேசிய போது, மதுரையில் நடைபெற்ற பொற்கிளி வழங்கும் நிகழ்ச்சியின் வழியாகத்தான் உதயநிதி ஸ்டாலின் அரசியலுக்கு வந்தார். வருங்காலத்தை வழிநடத்த உள்ளார். தமிழக முதல்வருக்கு உற்றத்துணையாக செயல்பட்டு வருகிறார்.
அனைத்து விதமான விழாக்களையும் நடத்த நீங்கள் வாய்ப்பு தந்தீர்கள், அதேபோல மதுரை மாவட்டத்தில் இளைஞர் அணி கூட்டத்தை நடத்த வாய்ப்பு தாருங்கள் என்று உதயநிதி ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்தார்.
விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின், 4 நாட்கள் முன்பாக தான் அமைச்சர் மூர்த்தியிடம் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யச் சொல்லி இருந்தேன் மிகப்பெரிய அளவில் ஒரு மாநாடை போல ஏற்பாடு செய்திருக்கிறார் என பேசினார்.
உதயநிதி ஸ்டாலின்காக பிரம்மாண்ட ஏற்பாடுகள் மதுரை மாவட்ட ஒருங்கிணை திமுக சார்பில் செய்யப்பட்டிருந்தது. ஆனால் மழை குறுக்கிட்டு கூட்டம் வேகமாக நிறைவடைந்ததால் மாவட்ட திமுகவினர் வருத்தம் அடைந்து உள்ளனர்.
கூட்டம் துவங்குவதற்கு முன்பாக கூடியிருந்த தொண்டர்கள் மற்றும் இளைஞர்களை உற்சாகப்படுத்த பாடல்கள் இசைக்கப்பட்டன. அதற்கு திமுகவினர் நடனமாடி தங்களுடைய மகிழ்ச்சியும் ஆரவாரத்தையும் வெளிப்படுத்தினர்.