ஆப்நகரம்

திருந்தாத மதுரை கெழவிகள்: பெண் குழந்தை மூச்சை நிறுத்தி கொடூர கொலை!

உசிலம்பட்டி அருகே நடைபெற்ற பெண் சிசுக் கொலையில், குழந்தையின் பாட்டி குழந்தையைத் தலையணையை வைத்து அழுத்தி கொலை செய்தது போலீசார் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

Samayam Tamil 20 Feb 2021, 9:33 am
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கே. பாறைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சின்னச்சாமி-சிவப்பிரியங்கா தம்பதிக்கு ஏற்கனவே 5 மற்றும் 3 வயதில் இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்தச் சூழலில் கடந்த 12ஆம் தேதி பழனி அருகே உள்ள அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் மூன்றாவதாகப் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
Samayam Tamil திருந்தாத மதுரை கெழவிகள்: பெண் குழந்தை மூச்சை நிறுத்தி கொடூர கொலை!


பிறந்த பச்சிளம் குழந்தை மூச்சுத்திணறல் ஏற்பட்டு அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. எனினும் அந்த குழந்தை உயிரிழந்துவிட்டது. மருத்துவர்கள் குழந்தையைப் பரிசோதித்த போது குழந்தையின் முகத்தில் காயங்கள் இருந்துள்ளது.

இதனால் குழந்தை கொலை செய்யப்பட்டுள்ளதா எனச் சந்தேகமடைந்த போலீசார் பெற்றோரிடம் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் சம்பவம் தொடர்பாகக் குழந்தையின் பாட்டி நாகம்மாளை அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.

மதுரையில் ரத யாத்திரை... கோர்ட் கிரீன் சிக்னல்!

அப்போது, குழந்தையைத் தலையணையை வைத்து அழுத்தி கொலை செய்தது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து மூதாட்டியை போலீசார் கைது செய்து அவரிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி