ஆப்நகரம்

மதுரை: கோயில் இடம் 50 ஏக்கரை ஆக்கிரமித்த வேளாண் கல்லூரி!

உசிலம்பட்டி அருகே கோயில் மற்றும் புறம்போக்கு நிலங்கள் 50 ஏக்கருக்கு மேல் ஆக்கிரமிப்பு செய்திருந்த தனியார் கல்லூரி நிர்வாகம் தொடர்பாக, பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் வருவாய்த்துறையினர் அளவீடு செய்தனர்.

Samayam Tamil 19 Nov 2020, 12:00 pm
அதிகாரிகள் நடத்திய ஆய்வில் கோயில் இடத்தில் ஆக்கிரமிப்புகள் நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து உடனடியாக கனரக வாகனங்களை கொண்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப் பட்டது.
Samayam Tamil மதுரை: கோயில் இடம் 50 ஏக்கரை ஆக்கிரமித்த வேளாண் கல்லூரி!
மதுரை: கோயில் இடம் 50 ஏக்கரை ஆக்கிரமித்த வேளாண் கல்லூரி!


மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கணூர் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் புராதன சிறப்புமிக்க சின்ன மகாலிங்கம் கோயில் உள்ளது.

இந்த கோயிலுக்குச் சொந்தமான நிலத்தையும், அதைச் சுற்றியுள்ள புறம்போக்கு நிலத்தையும் தனியார் வேளாண் கல்லூரி நிர்வாகத்தினர் ஆக்கிரமித்து வந்தது குறித்து சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள 18 பட்டி கிராம மக்கள் ஒன்றிணைந்து கடந்த மாதம் புகார் அளித்திருந்தனர்.

கிராம மக்களின் புகாரின் அடிப்படையில் கல்லூரி மற்றும் கோயிலுக்குப் பாத்தியப்பட்ட இடத்தை அளவிடும் பணி இறுதிக் கட்டமாகப் புதன்கிழமை நடத்தப்பட்டது.

இதில் கல்லூரி நிர்வாகத்தினர் கோயில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சுமார் 70க்கும் ஏக்கருக்கும் அதிகமான நிலத்தை ஆக்கிரமித்துப் பயன்படுத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பட்டாசு வெடித்ததால் 2 கிராமங்களுக்குச் சண்டை: ஊராட்சித் தலைவர் கணவர், பலர் மீது வழக்குப் பதிவு!

ஆக்கிரமிப்புகளைக் கண்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் தொட்டப்ப நாயக்கணூர் ஊராட்சி மன்ற தலைவர் பலமுருக மகாராஜா உதவியுடன் உடனடியாக ஜேசிபி இயந்திரம் கொண்டுவந்து முதற்கட்டமாக சுமார் 20 ஏக்கர் அளவு ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

தொடர்ந்து மிதமுள்ள ஆக்கிரமிப்புகளை அளவிட்டு அதை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்

அடுத்த செய்தி