ஆப்நகரம்

மதுரை போலீசார் ஸ்டேசனில் இன்ஸ்பெக்டருக்கு வளைகாப்பு விழா!

போலீஸ் நிலையம் என்பது பொது புத்தியில்தான் தவறான புரிதல் உள்ளது, அங்கு வேலை பார்ப்பவர்களுக்கு அது எப்போதுமே ஒரு வீட்டை போன்றது என்பதை உணர்த்தும் வகையில் போலீசார் செயல் அமைந்துள்ளது...

Samayam Tamil 10 Nov 2020, 11:42 am
மதுரையில் காவல்நிலையத்தில் வைத்து பெண் காவல் ஆய்வாளருக்கு நடத்தப்பட்ட வளைகாப்பு சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil மதுரை போலீசார் ஸ்டேசனில் இன்ஸ்பெக்டருக்கு வளைகாப்பு விழா!
மதுரை போலீசார் ஸ்டேசனில் இன்ஸ்பெக்டருக்கு வளைகாப்பு விழா!


மதுரை மதிச்சியம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராக பணி புரிந்து வருபவர் அமுதவள்ளி. தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார்.

இந்த சூழலில் பெண் உதவி ஆய்வாளர் அமுதவள்ளியுடன் பணியாற்றும் போலீசார் வளைகாப்பு நிகழ்ச்சியை காவல் நிலையத்திலே நடத்த திட்டமிட்டுள்ளனர்.

நிகழ்ச்சியின்போது எடுக்கப்பட்டப் படம்


அதன்படி மதிச்சியம் காவல் நிலையத்தில் பணிபுரியும் போலீசார் இணைந்து வளைகாப்பு கொண்டாடியுள்ளனர்.

குரு பயிற்சிக்குத் தயாரான குருவித்துறை குருபகவான்: முழுத் தகவல்!

இந்த நிகழ்ச்சியில் மதிச்சியம் காவல் ஆய்வாளர் செல்வி, காவல் துணை ஆணையர் லில்லி கிரேஸ் உள்ளிட்டோர் தலைமையில் அமுதவள்ளிக்கு வளைகாப்பு நிகழ்வு நடந்தது. காவல் நிலையத்தில் நடப்பட்ட வளைகாப்பு சம்பவம் போலீசாரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அடுத்த செய்தி