ஆப்நகரம்

இதுக்கு மட்டும் அனுமதி கொடுங்கள்; நீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் கெஞ்சல்!

வேதாந்தா ஸ்டெர்லைட் நிறுவனம் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில் தொழிற்சாலையின் உள்ளே இருக்கும் ரூ.200 கோடி மூலப்பொருட்களை விற்க அனுமதி வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 11 Aug 2021, 4:58 pm
தூத்துக்குடியில் இயங்கி வரும் வேதாந்தா ஸ்டெர்லைட் நிறுவனத்தின் மேலாளர் சுமதி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
Samayam Tamil ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம்
ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம்


வேதாந்தா ஸ்டெர்லைட் நிறுவனத்தின் உள்ளே ரூ.200 கோடி மேல் மதிப்புள்ள மூலப்பொருட்கள் உள்ளது. அதனை எடுத்து விற்பனை செய்வதற்கு அனுமதி அளிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த மனு நீதிபதிகள் துரைச்சாமி, ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மனுதாரர் தரப்பில் இது தொடர்பான வழக்கு வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளதா என கேள்வி எழுப்பினர். அதற்கு மனுதாரர் தரப்பில் அவ்வாறு எந்த ஒரு வழக்கும் தாக்கல் செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.

இயலாமையின் வெளிப்பாடு வெள்ளை அறிக்கை; வாண்டடா வண்டியில் ஏறும் முன்னாள் அமைச்சர்!

இதனையடுத்து நீதிபதிகள், வழக்கு குறித்து தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை செப்டம்பர் 2ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

அடுத்த செய்தி