ஆப்நகரம்

பொது ரோட்டுக்கு கேட்டு: மதுரை நகைக்கடை அதிபர் அட்டகாசம்!

மதுரை மாவட்டத்தில் ரோட்டுக்கு கேட்டு போட்டு அட்டகாசம் செய்யும் நகைக்கடை அதிபரின் செயல் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது. இதுத் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Samayam Tamil 12 Oct 2021, 11:20 pm
மதுரை மாவட்டம் விரகனூர் பாலாஜி நகரை சேர்ந்த ரவிக்குமார். இவர் அதே பகுதியில் நகைக் கடை நடத்தி வருகிறார்.
Samayam Tamil பொது ரோட்டுக்கு கேட்டு: மதுரை நகைக்கடை அதிபர் அட்டகாசம்!


இந்த சூழலில் இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு விரகனூர் பகுதியில் வீடு கட்டிய குடியேறி உள்ளார். அதன் எதிரே இருக்கக்கூடிய இடத்தையும் அவரை வாங்கியுள்ளார்.

இப்படி இருக்க இரண்டு இடத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் அரசுக்காக கொடுக்கப்பட்ட சாலையை எனக்குத்தான் சொந்தம் எனக்கூறி 10 அடி உயரத்திற்கு இரும்பாலான கேட் அமைத்து அராஜகம் செய்துள்ளார்.

மேலும் இவர் அதோடு நிறுத்திக் கொள்ளாமல் அரசுக்கு சொந்தமான பொது சாலையை ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இது குறித்து அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகரிடம் புகார் மனு ஓன்றையும் அளித்து உள்ளனர்.

இதையடுத்து மனு தொடர்பாக தொடர்பாக நடவடிக்கை எடுத்து பதில் அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் உத்தரவு ஒன்றையும் பிறப்பித்துள்ளார்.

20 வருஷமா 5ஆவது தாண்ட முடியல: சாதி சான்றிதழ் கொடுத்து கனவுகளுக்கு வழி கொடுத்த அரசு அதிகாரி!
ஆனால், உத்தரவு வந்து ஒரு மாத காலம் ஆகியும் தற்போது வரை அதிகாரிகள் நகைக்கடை அதிகாரி மீது நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.

பதிலாக அதிகாரிகள் குறிப்பிட்ட நகைக்கடை அதிபருடன் கூட்டு சேர்ந்து கொண்டு பொதுப் பாதையை மறைத்து அமைக்கப்பட்டுள்ள கேட்டை அகற்றாமல் இருந்து வருகின்றனர். மேலும் ஆக்கிரமிப்பு செய்துள்ள நபருக்கு துணை போவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் காரணமாக குறிப்பிட்ட பகுதியில் வசித்து வரும் பொது மக்கள் வேதனை தெரிவித்து, இந்த விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை ஒன்றை நம்மிடம் முன் வைத்துள்ளனர்.

அடுத்த செய்தி