ஆப்நகரம்

வெள்ளத்துக்குத் தயாராகும் மதுரை... ஏற்பாடுகள் என்னென்ன?

மழை பாதிப்பு குறித்து 0452-1077 என்ற இலவச எண்ணிலும்,9597176061 வாட்சப் எண்ணில் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் .

Samayam Tamil 24 Nov 2020, 3:26 pm
நிவர் புயல் எதிரொலி மதுரையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஆலோசனை. நடைபெற்றது. இந்த ஆலோசனைக்குப் பிறகு முன்னேற்பாடுகள் குறித்தும் அவசரகாலத் தொடர்பு எண்கள் குறித்தும் ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.
Samayam Tamil what are the arrangements made by madurai to face flood
வெள்ளத்துக்குத் தயாராகும் மதுரை... ஏற்பாடுகள் என்னென்ன?


ஆலோசனைக் கூட்டம்:

நிவர் புயல் எதிரொலியாக மதுரை மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள மழை வெள்ள பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது.

கமாண்டோக்கள் பங்கேற்பு:

கூட்டத்தில் தேசிய பேரிடர் மீட்புக்குழு கமாண்டோ ராஜன் பாலு தலைமையிலான வீரர்கள், தீயணைப்புத்துறை, காவல்துறை, பேரிடர் மேலாண்மைத்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட அனைத்துத்துறை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்,

ஆட்சியர் அன்பழகன்

கூட்டத்தில் மதுரை மாவட்டத்தில் மழை பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் மீட்பு பணிகள் குறித்த ஆலோசனைகளை ஆட்சியர் அன்பழகன் அதிகாரிகளுக்கு வழங்கினார், அது போக, அரசின் உத்தரவின் பேரில் பணிகளை முடுக்கிவிட்டுத் தயாராக இருக்க வேண்டும் என்றும் மாநகராட்சிக்குட்பட்ட மீட்புக்குழுவுக்க் உத்தரவு பிறப்பித்தார்.

தொடர்பு எண்கள்

25 தேசிய பேரிடர் மீட்புக்குழு வீரர்கள் மதுரை வந்துள்ளதாகவும், மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்படும் 27 இடங்களில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும்,மழை பாதிப்பு குறித்து 0452-1077 என்ற இலவச எண்ணிலும்,9597176061 வாட்சப் எண்ணில் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் .

மாநகராட்சி பகுதிகளில் வசிக்கும் மக்கள் 8428425000 என்ற எண்ணிலும், 0452-2530521, 0452- 2530526 இந்த எண்களிலும் மாவட்ட கட்டுப்பாட்டு அறையை பொதுமக்கள் தொடர்புகொண்டு மழை குறித்த தகவல்கள் கூறலாம் என தெரிவித்தார்.

அடுத்த செய்தி