மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் 100% சத தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது. இதில் 63 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு துணைவேந்தர் கிருஷ்ணன் விருது வழங்கினார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் செயல்படும் சமூக மாற்றத்திற்கான மையம்(Social Transformation Centre) திங்களன்று டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அரங்கில் நடைபெற்றது. இதில் உசிலம்பட்டி மற்றும் திருமங்கலம் கல்வி மாவட்டங்களில் இருந்து 2018-19 ல் மேனிலை இரண்டாமாண்டில் நூறு சதவிகிதம் தேர்ச்சி்பெற்ற 63 பள்ளிகளுக்கு விருதும் சான்றிதழும் வழங்கப்பட்டது.
இதில் மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு. ஆர்.சுவாமிநாதன் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டார். பின்னர் மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் சிறப்புரை ஆற்றினார்.
பட்டாசு ஆலை விபத்துகள்... தொழிலாளர்களுக்கு மதுரை கலெக்டர் அட்வைஸ்!
அப்போது உலகத்தில் உள்ள அனைத்து வசதிகளும் இந்தியாவில் உள்ளது. ஆனாலும் உலகத்தரத்தில் ஒரு தனித்தன்மையை அடையாததற்கு காரணம் உயர்கல்வியில் கண்டுபிடிக்கும் கண்டுபிடிப்புகள் கிராமத்திற்கு கொண்டு செல்லாதது காரணத்தினால் உலகத் தரத்திற்கு இந்தியாவின் தனித்தன்மையைக் காட்ட முடியவில்லை எனக் கூறினார்.
நாம் வளர்வது மட்டும் உண்மையான வளர்ச்சி அல்ல தன் சமுதாயத்தையும் வளர்ச்சிக்கு கொண்டு செல்வதே உண்மையான வளர்ச்சி என துணைவேந்தர் கிருஷ்ணன் தெரிவித்தார்.
இதில் மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு. ஆர்.சுவாமிநாதன் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டார். பின்னர் மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன் சிறப்புரை ஆற்றினார்.
பட்டாசு ஆலை விபத்துகள்... தொழிலாளர்களுக்கு மதுரை கலெக்டர் அட்வைஸ்!
அப்போது உலகத்தில் உள்ள அனைத்து வசதிகளும் இந்தியாவில் உள்ளது. ஆனாலும் உலகத்தரத்தில் ஒரு தனித்தன்மையை அடையாததற்கு காரணம் உயர்கல்வியில் கண்டுபிடிக்கும் கண்டுபிடிப்புகள் கிராமத்திற்கு கொண்டு செல்லாதது காரணத்தினால் உலகத் தரத்திற்கு இந்தியாவின் தனித்தன்மையைக் காட்ட முடியவில்லை எனக் கூறினார்.
நாம் வளர்வது மட்டும் உண்மையான வளர்ச்சி அல்ல தன் சமுதாயத்தையும் வளர்ச்சிக்கு கொண்டு செல்வதே உண்மையான வளர்ச்சி என துணைவேந்தர் கிருஷ்ணன் தெரிவித்தார்.