ஆப்நகரம்

ஓபிஎஸ் மதுரை சென்டிமெண்ட்; திமுகவிற்கு மரண அடி கொடுக்குமா அதிமுக?

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மதுரை சென்டிமெண்ட் பிரச்சாரம் அதிமுகவிற்கு எந்தளவு கைகொடுக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

Samayam Tamil 20 Feb 2022, 11:19 am
தமிழகத்தில் நகர்ப்புற பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் நேற்றைய தினம் (பிப்ரவரி 19) நடந்து முடிந்தது. பெரும்பாலான இடங்களில் அமைதியாக தேர்தல் நடந்தாலும், சில இடங்களில் சண்டை, சச்சரவுகளை பார்க்க முடிந்தது. வரும் 22ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. அந்த நாளை அரசியல் கட்சிகள் மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றன.
Samayam Tamil will aiadmk coordinator o panneerselvam madurai sentiment help tn local body election 2022 victory
ஓபிஎஸ் மதுரை சென்டிமெண்ட்; திமுகவிற்கு மரண அடி கொடுக்குமா அதிமுக?


மதுரையில் பிரச்சாரம்

ஆளுங்கட்சியாக திமுக இருப்பதால் அக்கட்சியின் வெற்றி வாய்ப்பு அதிகமிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம் கொங்கு மண்டலம் மற்றும் சில தென் மாவட்டங்களில் அதிமுகவிற்கு சாதகமான முடிவுகள் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. இதற்கிடையில் முன்னாள் முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தின் ’மதுரை சென்டிமெண்ட்’ அதிமுகவின் வெற்றி வாய்ப்பிற்கு கைகொடுக்குமா? என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மீனாட்சி அம்மன் தரிசனம்

அதென்ன மதுரை சென்டிமெண்ட் என்று பலருக்கும் கேள்வி எழலாம். அதாவது, ஓ.பன்னீர்செல்வம் எங்கு தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினாலும் இறுதியில் மதுரையில் தான் பிரச்சாரத்தை நிறைவு செய்ய வேண்டும் என்று விரும்புவாராம். அப்படியே மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு தேனிக்கு புறப்பட்டு சென்றுவிடுவார் என்கின்றனர் ஓபிஎஸ்க்கு நெருங்கிய வட்டாரத்தினர்.


அதிமுக எத்தனை இடங்களில் வெற்றி பெறும்? அடித்து சொன்ன ஓ.பி.எஸ்!

அதிமுக வேட்பாளர்கள் அறிமுகம்

இது அதிமுகவின் வெற்றிக்கு பெரிதும் உதவும் என்று ஒரு நம்பிக்கை கொண்டுள்ளாராம். அந்த வகையில் 2022 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒட்டி, காஞ்சிபுரத்தில் தான் தனது பிரச்சாரத்தை ஓ.பன்னீர்செல்வம் தொடங்கினார். அதன்பிறகு பல்வேறு மாநகராட்சிகளில் தொடர் பிரச்சாரம் செய்து, இறுதியில் மதுரை மாநகராட்சியில் பிரச்சாரத்தை நிறைவு செய்தார். மதுரையில் உள்ள பழங்காநத்தம் ரவுண்டானாவில் அதிமுக வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது.

தேனி அதிமுக குமுறல்

அதில் கலந்து கொண்டு வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். பின்னர் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ததாக தெரிகிறது. அதன்பின்னர் பெரியகுளத்திற்கு திரும்பியுள்ளார். இதற்கிடையில் மாநகராட்சிகளில் மட்டும் ஓ.பன்னீர்செல்வம் கவனம் செலுத்திகிறார் என்று தேனி அதிமுகவிற்குள் எழுந்த குமுறலால் அம்மாவட்டத்தின் நகராட்சி, பேரூராட்சிகளிலும் பிரச்சாரம் செய்து முடித்தது குறிப்பிடத்தக்கது.

வெற்றி வாகை சூடுமா அதிமுக?

இதுதொடர்பாக நமது “சமயம் தமிழ்” இணையதளத்திலும் எக்ஸ்க்ளூசீவ் செய்தி ஒன்றை பதிவிட்டிருந்தோம். இங்கு கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் மதுரையில் தேர்தல் பிரச்சாரத்தை நிறைவு செய்வதும், மீனாட்சி அம்மனின் அருளை பெறுவதும் அதிமுகவின் வெற்றி வாய்ப்பிற்கு கூடுதல் பலம் சேர்க்கும் என்பது ஓ.பன்னீர்செல்வத்தின் நம்பிக்கையாக சொல்லப்படுகிறது.


மதுரையில் மறுதேர்தல்… அதிர்ச்சியில் உறைந்த அரசியல் கட்சிகள்!

உளவுத்துறை ரிப்போர்ட்

எனவே ஓபிஎஸ் நினைத்தது போல் பல்வேறு மாவட்டங்களில் அதிமுக சர்ப்ரைஸ் வெற்றி பெறுமா? இல்லை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கிடைத்த உளவுத்துறை ரிப்போர்ட்டில் இடம்பெற்றிருப்பது போல் கொங்கு மற்றும் தென் மண்டலத்தில் மட்டும் வெற்றி கனி பறிக்குமா என்பது 22ஆம் தேதி தெரிந்துவிடும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

அடுத்த செய்தி