ஆப்நகரம்

கொரோனாவை வணிகமாக்கிய மருத்துவமனைகள்: கண் மூடி நிற்கும் அரசு, நடவடிக்கை எடுக்கப்படுமா?

தடுப்பு மருந்து இந்தியா வந்தடைய 2021 ஆகும் திட்டவட்டமாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துவிட்டனர். எனினும் பயன்படுத்தி, மருத்துவத்தை வணிகமாக்கி பல்வேறு தனியார் மருத்துவமனைகள் லட்சக் கணக்கில் பணத்தை வசூல் செய்து வருகின்றன.

Samayam Tamil 2 Dec 2020, 8:42 pm
மதுரையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனைகள் சில கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களை உள்ளே அனுமதிக்க ரூ. 3 முதல் ரூ. 5 லட்சம் வரை டெபாசிட் செய்ய வேண்டும் என விதிகளை வகுத்துள்ளன. இதோடு செலவு முடியாது, வைத்தியத்திற்கு சுமார் ரூ. 10 லட்சம் வரை சில மருத்துவமனைகள் வசூல் வேட்டை நடத்துகின்றன.
Samayam Tamil without proper medicine corona treatment in private hospital charges in lakhs
கொரோனாவை வணிகமாக்கிய மருத்துவமனைகள்: கண் மூடி நிற்கும் அரசு, நடவடிக்கை எடுக்கப்படுமா?



ஆமா மருந்தே இல்லையே...

கொரோனா என்பதை இப்போதைய நேரத்தில் பெரும்பாலான தனியார் மருத்துவமனைகள் வணிக நோக்கத்தோடே அணுகுகின்றன. நாட்டில் உள்ள அனைவரும் அறிந்த ஒரு விஷயம், கொரோனாவுக்கு மருந்து இல்லை என்பதுதான். அப்படியிருக்க எதை வைத்து கொரோனாவிற்கு சிகிச்சை பார்க்கப்படுகின்றன என்பது பெரும் கேள்விக் குறியாக உள்ளது.

உணவே மருந்து...

பெரும்பாலான மருத்துவமனைகள் சத்தான உணவுகளை கொரோனா நோயாளிகளுக்கு வழங்கிதான் சிகிச்சை எனப் பணம் வசூலிக்கின்றன. பெரும்பாலும் எதிர்ப்புச் சக்தியை ஊக்குவிக்கும் வகையாக மருந்துகள், மாத்திரைகளும் வழங்கப்படுகின்றன. இதற்கிடையே காய்ச்சல், சளி போன்றவற்றுக்கும் மருந்துகள் வழங்கப்படுகின்றன.

ஏன் கண்டுக் கொள்வது இல்லை..?

இந்த மாத்திரைகளைக் கொடுத்து சுகாதாரப் பணியாளர்களை வேலை வாங்கிக் கொண்டு லட்சக் கணக்கில் மருத்துவமனைகள் பணத்தைப் பிடுங்குவது அனைவரும் அறிந்த குற்றச்சாட்டு. ஆனாலும் அரசு அதிகாரிகள், போலீசார் என யாரும் கேள்வி எழுப்புவதில்லை.

சுகாதாரம் காப்பவர்களுக்குச் சிறப்புச் சம்பளமெல்லாம் கிடையாது...

இப்படி லட்சக்கணக்கில் வசூல் செய்யும் மருத்துவமனைகள், கொரோனா வார்டில் பெரும்பாலான வேலைகளைச் சுகாதார பணியாளர்களைக் கொண்டுதான் மேற்கொள்கிறது. இதற்காகக் குறிப்பிட்ட பணியாளர்களுக்குச் சிறப்புச் சம்பளமெல்லாம் வழங்கப்படுவதில்லை. பதிலாக வாரம் அல்லது மாதம் ஒருமுறை எதிர்ப்புச் சக்தி மாத்திரை வழங்கப்படுகின்றன.


மருத்துவம் என்பது சேவைதானே!

மருத்துவம் என்பது சேவை. எனினும், அனைவருக்கும் சமமான மருத்துவ வசதி கிடைக்கும் வகையில் நம் நாட்டில் மருத்துவத் துறை கட்டமைக்கப்படவில்லை. அதேவேளை கொரோனா போன்ற பேரிடர் காலங்களில், அனைத்து துறைகளும் சரிவைச் சந்தித்து வரும் சூழலில் மருத்துவத் துறையில் நடக்கும் இந்த வசூல் வேட்டை தொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

அடுத்த செய்தி