ஆப்நகரம்

கள்ளநோட்டு கொடுத்தவரை விரட்டி சென்று பிடித்த சிங்கப் பெண்!

மதுரையில் கள்ளநோட்டை மாற்றிய நபரை விரட்டி பிடித்த பெண்ணின் செயல் பலரின் கவனத்தைப் பெற்றுள்ளது. பிடிபட்ட நபரிடமிருந்து ரூ. 20 ஆயிரம் மதிப்புள்ள கள்ளநோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Samayam Tamil 25 Nov 2020, 11:49 pm
மதுரை மேலப்பனங்காடி பகுதியைச் சேர்ந்த உமா சந்திரா. இந்தப் பெண் அந்த பகுதியில் மளிகைக்கடை நடத்தி வருகிறார். வழக்கம்போல் உமா செவ்வாய்க் கிழமை வியாபாரம் செய்துகொண்டிருந்த போது கூடல்புதூர் பகுதியைச் சேர்ந்த காதர் பாட்ஷா என்ற முதியவர் கடைக்கு வந்து மளிகை பொருட்கள் வாங்கி உள்ளார்.
Samayam Tamil கள்ளநோட்டு கொடுத்தவரை விரட்டி சென்று பிடித்த சிங்கப் பெண்!
கள்ளநோட்டு கொடுத்தவரை விரட்டி சென்று பிடித்த சிங்கப் பெண்!


அதன் பின் அவர் ரூ. 500 கள்ளநோட்டைக் கொடுத்துவிட்டு மீதி சில்லறையை வாங்கி சென்றுவிட்டார். இதையடுத்து உமா சந்திரா 500 ரூபாய் நோட்டை பார்த்தபோது கள்ளநோட்டு போல இருந்ததால் அவரை அழைத்துள்ளார்.

ஆனால் அதற்கு அந்த முதியவர் பதில் கூறாமல் தப்பி ஓடியுள்ளார். உடனடியாக சுதாரித்துக் கொண்ட உமா சந்திரா அவரை விரட்டிப் பிடித்துள்ளார். அந்த முதியவர் பொதுமக்கள் உதவியோடு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

குப்பை லாரிகளுக்கு சிறை: அதிரடி காட்டிய மக்கள்!

அதைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அவரிடமிருந்து 19 ஆயிரம் மதிப்பில் போலி 500ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

இது குறித்து கூடல்புதூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். கள்ளநோட்டு மாற்றிய நபரை விரட்டி பிடித்த பெண்மணிக்கு போலீசார் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.

அடுத்த செய்தி