ஆப்நகரம்

தங்க நாணயத்தை கொடுத்து தங்க சங்கிலி வாங்கி ஏமாற்றும் மதுரை வில்லி!

மதுரை அருகே போலி தங்க நாணயங்களை கொடுத்து 4 பவுன் நகை மற்றும் பணத்தை அபகரித்து சென்ற மர்ம பெண்ணை போலிசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் வலைவீசி தேடி வருகின்றனர்.

Samayam Tamil 21 Sep 2021, 9:21 pm
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்காணூரணியை அடுத்ததுள்ள சொரிக்காம்பட்டியைச் சேர்ந்த நாகஜோதி என்ற பெண்ணிடம் அடையாளம் தெரியாத சுமார் 21 வயது மதிக்கத்தக்க இளம்பெண் தன்னிடம் தங்க நாணயங்கள் உள்ளதாகவும் குடும்ப வறுமை காரணமாக தங்க நாணயங்களை அடகு வைத்து தருமாறு கோரியதாக கூறப்படுகிறது.
Samayam Tamil தங்க நாணயத்தை கொடுத்து தங்க சங்கிலி வாங்கி ஏமாற்றும் மதுரை வில்லி!


முதலில் ஒரு நாணயத்தை கொடுத்ததால் அதை அடகு வைக்க நாகஜோதி தனக்கு தெரிந்த நகை அடகு கடைக்கு சென்று சோதனை செய்ததில் ஒரிஜினல் தங்க நாணயம் தான் 9000 அடகு தொகையாக வழங்கப்படும் என கடை உரிமையாளர் தெரிவிக்க.

கூடுதல் தொகைக்கு அடகு வைக்கலாம் என ஆசை காட்டி மற்றொரு கடைக்கு அழைத்து செல்ல கோரியுள்ளார் மர்ம பெண். இந்நிலையில் நாகஜோதியை இடை மறித்து தன்னிடம் மொத்தமாக பத்து தங்க நாணயங்கள் உள்ளது அதை வைத்துக் கொண்டு குறிப்பிட்ட தொகையை கொடுக்குமாறும், அதற்கான தொகையை அடகு வைத்து பெற்றுக் கொள்ளுங்கள் என கூறிய நிலையில் தன்னிடமிருந்த ரூபாய் 9ஆயிரம் ரொக்கம் மற்றும் 4 பவுன் தங்க செயினை மர்ம பெண்ணிடம் நாகஜோதி வழங்கியதாக கூறப்படுகிறது.

பெண்களே உஷார்: வாகனத்தை உதைத்து செயின் பறிக்கும் கும்பல், ஒருவர் சிக்கினார்!
மர்ம பெண் சென்ற பின் 10 நாணயங்களையும் அடகு வைக்க கடைக்கு சென்ற போது அனைத்தும் போலி தங்க நாணயம் என கடை உரிமையாளர் தெரிவிக்க அதிர்ச்சியடைந்த நாகஜோதி செக்காணூரணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் இரு தனிப்படைகள் அமைத்து முதலில் நாணயத்தை சோதனை செய்ய சென்ற நகை அடகு கடையில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு போலி தங்க நாணயத்தை கொடுத்து நூதன மோசடியில் ஈடுபட்ட மர்ம பெண்ணை செக்காணூரணி போலிசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

அடுத்த செய்தி