ஆப்நகரம்

அரசு பணியாளர் தேர்வாணையம் அதிரடி; தேர்வர்கள் அதிர்ச்சி!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் எடுத்துள்ள திடீர் நடவடிக்கையால் தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Samayam Tamil 6 Mar 2022, 7:47 am
தமிழ்நாட்டில் மத்திய அரசுப் பணிகளில் தமிழருக்கே வேலை என்று ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தி மயிலாடுதுறையில், தமிழர் தேசிய முன்னணி மற்றும் மயிலாடுதுறை மாவட்ட வளர்ச்சிக்குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்றது.
Samayam Tamil மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்



அண்மையில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் 940 அஞ்சல் பிரிப்பர் என்ற பணியிடங்களை தமிழ்நாட்டுக்கு நிரப்பியதில் 900 பேர் வட இந்தியர்களை மட்டுமே நியமித்துள்ளது.

இதேப்போல் மத்திய அரசு அலுவலகங்களான ரயில்வே, வருமான வரித்துறை, அஞ்சல்துறை, ஜிஎஸ்டி போன்ற அலுவலகங்களில் வட இந்தியர்களே அதிக அளவில் பணி நியமனம் செய்யப்படுகின்றனர்.

கரு.பழனியப்பனுக்கு வந்தது மிரட்டல்; சினிமா வட்டாரம் ஷாக்!
இதனை கடுமையாக கண்டிக்கும் வகையிலும், தமிழகத்தில் மத்திய அரசு அலுவலகங்களில் தமிழருக்கு 75 சதவீத இட ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தியும் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழர் தேசிய முன்னணி மாவட்ட தலைவர் பேராசிரியர் முரளிதரன் தலைமையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

படையை திரட்டும் சசிகலா; பீதியில் அதிமுக தலைமை!
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின்போது தமிழ்நாட்டில் மத்திய அரசு பணிகளில் தமிழருக்கே வேலை என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி கோஷங்களை எழுப்பினர்.

அடுத்த செய்தி