மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ஓலையாம்புதூர் கிராமம் உள்ளது. அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் சேகர் - மாரியம்மாள் தம்பதியர். இவர்களுக்கு ஹரிஹரன் என்ற மகன் உள்ளார். இவர் ஒரு பட்டதாரி இளைஞர் ஆவார். இவருக்கு நாய் வளர்ப்பதில் மிகவும் இஷ்டம் இருந்துள்ளது. இந்த நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஹரிஹரன் பெண் நாய்க்குட்டி ஒன்றை ஆசையாக வீட்டிற்கு எடுத்து வந்துள்ளார். அதனை குடும்பத்தார் அனைவரும் சேர்ந்து பத்திரமாகவும் மிகுந்த பாசத்தோடும் கவனிப்போடும் வளர்த்து வந்துள்ளனர்.
அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
ஹரிஹரனின் ஆர்வத்தை கண்ட அவரது பெற்றோர்கள் அந்த வாயில்லா ஜீவனுக்கு பால், பிஸ்கட் போன்ற உணவுகளை வழங்கி மகனுடன் சேர்ந்து பாசமாக பார்த்துக் கொண்டதோடு தங்கள் வீட்டில் ஒரு பிள்ளையாகவே நினைத்து வளர்த்து வந்தனர். மேலும் அந்த செல்லப்பிராணிக்கு சே சீ என பெயரிட்டு கண்கள் குடும்ப உறுப்பினராகவே கருதினர்.
அந்த வாயில்லா ஜீவனும் குடும்பத்தார் அனைவர் மீதும் மிகவும் பாசத்தோடும் நன்றியோடும் இருந்து வருகிறது. இந்த நிலையில் அந்த செல்லப்பிராணி சே சீ முதல்முறையாக கர்ப்பம் அடைந்துள்ளது.
அதற்காக ஹரிஹரன் வளர்ப்பு நாய்க்கு சீமந்தம் செய்திட தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். ஆனால் முதலில் அதற்கு பெற்றோர்கள் தயங்கி உள்ளனர்.
ஆனால் எப்படியோ ஹரிஹரன் தனது பெற்றோர்களை அந்த செல்லப்பிராணிக்கு சீமந்தம் செய்து வைத்திட சம்மதிக்க வைத்துள்ளார். பின்னர் பெற்றோரும் தங்கள் குடும்ப உறுப்பினராக வளர்த்து வரும் சே சீ.,க்கு சீமந்தம் செய்ய முன்வந்தனர்.
அதன்படி நல்ல நாளாக பார்த்து இன்று சே சீ.,க்கு சீமந்தம் செய்து வைத்தனர். நிகழ்வில் முன்னதாக ஆப்பிள், வாழைப்பழம் உட்பட பல பழங்கள் மற்றும் இனிப்புகளை சீர்வரிசை தட்டுகளாக வைத்தனர்.
அந்த நிகழ்ச்சிக்கு ஹரிஹரன் மற்றும் குடும்பத்தார் அக்கம் பக்கத்தில் உள்ள ஒரு சிலரை மட்டும் அழைத்தனர். பின்னர் சே சீ.,க்கு அலங்காரம் செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து அந்த செல்லப் பிராணியை நிற்க வைத்து வீட்டின் உரிமையாளர்கள் நலங்கி வைத்து சீமந்தம் செய்து ஆரத்தி எடுத்தனர். அதனை அவர்கள் வீடியோவாக எடுத்து தங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு அனுப்பி மகிழ்ந்தனர்.
ஒரு குடும்பமே சேர்ந்து தன் வீட்டில் வளர்த்து வரும் வாயில்லா ஜீவனுக்கு அலங்காரம் செய்து சீமந்தம் நடத்தி வைத்துள்ள சம்பவம் அந்த பகுதி முழுவதும் பேசு பொருளாகியுள்ளது. அதோடு அனைவரது கவனத்தையும் ஈர்த்து பாராட்டுகளை பெற்று நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
ஹரிஹரனின் ஆர்வத்தை கண்ட அவரது பெற்றோர்கள் அந்த வாயில்லா ஜீவனுக்கு பால், பிஸ்கட் போன்ற உணவுகளை வழங்கி மகனுடன் சேர்ந்து பாசமாக பார்த்துக் கொண்டதோடு தங்கள் வீட்டில் ஒரு பிள்ளையாகவே நினைத்து வளர்த்து வந்தனர். மேலும் அந்த செல்லப்பிராணிக்கு சே சீ என பெயரிட்டு கண்கள் குடும்ப உறுப்பினராகவே கருதினர்.
அந்த வாயில்லா ஜீவனும் குடும்பத்தார் அனைவர் மீதும் மிகவும் பாசத்தோடும் நன்றியோடும் இருந்து வருகிறது. இந்த நிலையில் அந்த செல்லப்பிராணி சே சீ முதல்முறையாக கர்ப்பம் அடைந்துள்ளது.
அதற்காக ஹரிஹரன் வளர்ப்பு நாய்க்கு சீமந்தம் செய்திட தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். ஆனால் முதலில் அதற்கு பெற்றோர்கள் தயங்கி உள்ளனர்.
ஆனால் எப்படியோ ஹரிஹரன் தனது பெற்றோர்களை அந்த செல்லப்பிராணிக்கு சீமந்தம் செய்து வைத்திட சம்மதிக்க வைத்துள்ளார். பின்னர் பெற்றோரும் தங்கள் குடும்ப உறுப்பினராக வளர்த்து வரும் சே சீ.,க்கு சீமந்தம் செய்ய முன்வந்தனர்.
அதன்படி நல்ல நாளாக பார்த்து இன்று சே சீ.,க்கு சீமந்தம் செய்து வைத்தனர். நிகழ்வில் முன்னதாக ஆப்பிள், வாழைப்பழம் உட்பட பல பழங்கள் மற்றும் இனிப்புகளை சீர்வரிசை தட்டுகளாக வைத்தனர்.
அந்த நிகழ்ச்சிக்கு ஹரிஹரன் மற்றும் குடும்பத்தார் அக்கம் பக்கத்தில் உள்ள ஒரு சிலரை மட்டும் அழைத்தனர். பின்னர் சே சீ.,க்கு அலங்காரம் செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து அந்த செல்லப் பிராணியை நிற்க வைத்து வீட்டின் உரிமையாளர்கள் நலங்கி வைத்து சீமந்தம் செய்து ஆரத்தி எடுத்தனர். அதனை அவர்கள் வீடியோவாக எடுத்து தங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு அனுப்பி மகிழ்ந்தனர்.
ஒரு குடும்பமே சேர்ந்து தன் வீட்டில் வளர்த்து வரும் வாயில்லா ஜீவனுக்கு அலங்காரம் செய்து சீமந்தம் நடத்தி வைத்துள்ள சம்பவம் அந்த பகுதி முழுவதும் பேசு பொருளாகியுள்ளது. அதோடு அனைவரது கவனத்தையும் ஈர்த்து பாராட்டுகளை பெற்று நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.