ஆப்நகரம்

Breaking News: குடிநீர் வினியோகம் நிறுத்தம்...மக்களே உஷார்!

பராமரிப்பு பணிகள் காரணமாக குடிநீர் வினியோகம் நாளை நிறுத்தப்படுவதால் பொதுமக்கள் சிக்கனமாக தண்ணீரை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

Samayam Tamil 29 Jan 2022, 9:02 pm
மயிலாடுதுறை நகராட்சி ஆணையர் பாலு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:
Samayam Tamil குடிநீர் குழாய்
குடிநீர் குழாய்



மயிலாடுதுறை நகரில் வசிக்கும் பொதுமக்களுக்கு நகராட்சியின் சார்பில் கொள்ளிடம் குடிநீர் திட்டம் மூலம் தங்கு தடையில்லாமல் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இதற்காக மயிலாடுதுறை அருகே மணல்மேடு, முடிகண்டநல்லூரில் கொள்ளிடம் ஆற்றில் உள்ள தலைமை நீரேற்று நிலையத்தில் இருந்து, குழாய்கள் மூலம் கொண்டு வரப்பட்டு நகரில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

வச்சி செய்த அமைச்சர்.. வெடிக்கும் விடுதலை சிறுத்தைகள்!

தற்போது பிரதான குடிநீர் குழாய்களில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) பராமரிப்பு பணி நடக்க உள்ளது. எனவே நாளை ஒரு நாள் மட்டும் மயிலாடுதுறை நகரில் குடிநீர் வினியோகம் இருக்காது.

எனவே, மயிலாடுதுறை நகரில் வசிக்கும் பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு மயிலாடுதுறை நகராட்சி ஆணையர் பாலு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி உள்ளார்.

அடுத்த செய்தி