ஆப்நகரம்

திமுகவின் முக்கிய வேலையே இதுதான்: ஷாக் கொடுக்கும் இந்து முன்னணி!

பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியை தடை செய்ததன் மூலம் இந்துக்கள் பண்பாட்டை அழிக்கும் நோக்கத்துடன் திமுக அரசு செயல்பட்டு மடாதிபதிகளை மிரட்டுவதாக இந்து முன்னணி மாநில தலைவர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Curated bySrini Vasan | Samayam Tamil 4 May 2022, 9:48 pm
இந்து முன்னணி அமைப்பு சார்பில் மயிலாடுதுறையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் புத்தாண்டு கருத்தரங்க கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற இந்து முன்னணி மாநிலத் தலைவர் சுப்பிரமணியம் செய்தியாளர்களை சந்தித்தார்.
Samayam Tamil இந்து முன்னணி மாநில தலைவர் சுப்பிரமணியன்


அப்போது பேசிய அவர்,

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

திமுக ஆட்சிக்கு வந்த இந்த ஓராண்டு காலத்தில் இந்துக்களுக்கு விரோதமாக செயல்பட்டு வருகின்றது மேலும் நூற்றுக்கணக்கான இந்து கோவில்களை திமுக அரசு இடித்துள்ளதாகவும் , கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் தங்களுடைய ஆட்சி நடப்பது போல் மனப்பான்மையில் செயல்பட்டு வருவதாகவும் விமர்சித்தார்.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நடக்கக்கூடிய பட்டின பிரவேசம் நிகழ்ச்சியை இந்துக்கள் பண்பாட்டை அழிக்கும் நோக்கில் தமிழக அரசு தடை செய்துள்ளதாக கூறிய அவர் சில அரசியல் கட்சிகள் மற்றும் நாத்திகவாதிகள் தமிழக முதல்வரை இயக்குவதாகவும் , இந்துக்களுடைய கட்டுபாடுகளை கலைக்க சிலர் முயற்சி செய்வதாகவும் தெரிவித்தார்.

லாட்டரி சீட்டு கடையில்‌ பயங்கரம்; திரில்லர் கதையை மிஞ்சும் கொள்ளை!
திமுக அரசு மடாதிபதிகளை மிரட்டுவதாகவும் , இதனால் பலர் அச்ச உணர்வோடு இருப்பதாகவும் இருப்பினும் மதுரை ஆதீனம் துணிந்து செய்தியாளர்களை சந்தித்தது பாராட்ட கூறியதாக தெரிவித்தார்.

இந்துக்களின் கலாச்சாரத்தை உடைக்க வெளிநாடுகளில் இருந்தும் சதி நடைபெறுவதாகவும் , மதச் சார்பற்ற நாடு என்பது பெயரளவில் மட்டும் இருப்பதாக விமர்சித்தார். மேலும் அரசாங்கத்திற்கு கூட்டணியில் உள்ள கட்சிகள் இந்து விரோத கட்சியாக இருப்பதாக தெரிவித்தார்.
எழுத்தாளர் பற்றி
Srini Vasan

அடுத்த செய்தி