மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்காவில் உள்ள கிராமம் இலையமுதுகூடம். இங்கு பிரசித்தி பெற்ற பரிபூரண புஷ்க்கலாம்பாள் சமேத கழுமங்கல உடைய அய்யனார் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் அப்பகுதி மக்களின் வேண்டுதலை நிறைவேற்றும் காவல் தெய்வமாகவும், பலருக்கு குல தெய்வமாகவும் விளங்கி வருகிறது. ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்படும். அந்த வகையில் நடப்பாண்டு கும்பாபிஷேக திருப்பணிகள் செய்ய ஊர் பெரியவர்கள் கூடி முடிவெடுத்தனர். இதன் தொடர்ச்சியாக பொதுமக்களின் பங்களிப்புடன் கோவில் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டது. இதையடுத்து இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை இலையமுதுகூடல் கிராம மக்கள் செய்திருந்தனர்.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 4ஆம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டன. இன்று காலை நான்காம் கால பூஜைகள் முடிவுற்று பூர்ணாஹுதி, மகா தீபாராதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து 8 மணிக்கு மங்கள வாத்தியங்கள் முழங்க கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு கோயிலை வலம் வந்து விமான கலசங்களை அடைந்தன.
பின்னர் 8.30 மணியளவில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் ஓதினர். அப்போது பாரதிய ஜனதா கட்சியின் ஓபிசி அணி மாநில துணைத்தலைவர் அகோரம் முன்னிலையில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா, முருகன் உள்ளிட்ட கோயில் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த சூழலில் சிவாச்சாரியார்கள் கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். இதனைத் தொடர்ந்து சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
கும்பாபிஷேக விழாவை காண மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேகத்தை கண்டு ரசித்து சுவாமி தரிசனம் செய்தனர். பரிபூரண புஷ்க்கலாம்பாள் அய்யனார் கோயிலில் நடந்த கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 4ஆம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டன. இன்று காலை நான்காம் கால பூஜைகள் முடிவுற்று பூர்ணாஹுதி, மகா தீபாராதனை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து 8 மணிக்கு மங்கள வாத்தியங்கள் முழங்க கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு கோயிலை வலம் வந்து விமான கலசங்களை அடைந்தன.
பின்னர் 8.30 மணியளவில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் ஓதினர். அப்போது பாரதிய ஜனதா கட்சியின் ஓபிசி அணி மாநில துணைத்தலைவர் அகோரம் முன்னிலையில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா, முருகன் உள்ளிட்ட கோயில் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த சூழலில் சிவாச்சாரியார்கள் கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். இதனைத் தொடர்ந்து சுவாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
கும்பாபிஷேக விழாவை காண மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேகத்தை கண்டு ரசித்து சுவாமி தரிசனம் செய்தனர். பரிபூரண புஷ்க்கலாம்பாள் அய்யனார் கோயிலில் நடந்த கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.