ஆப்நகரம்

தர்மபுரம் ஆதீனம் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி; குருமகா சன்னிதானம் நாற்காலி பல்லக்கில் சென்று வழிபாடு!

மயிலாடுதுறை தருமபுர ஆதீன திருமடத்தில் குருபூஜை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தருமபுர ஆதீனம் மடாதிபதியை நாற்காலி பள்ளிக்கில் பக்தர்கள் சுமந்து செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Curated byPoorani Lakshmanasamy | Samayam Tamil 21 May 2022, 10:39 am
மயிலாடுதுறை தருமபுர ஆதீன திருமடத்தில் குருபூஜை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தருமபுர ஆதீனம் மடாதிபதி நாற்காலி பல்லக்கில் சென்று வழிபாடு நடத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
Samayam Tamil குருமகா சன்னிதானம் நாற்காலி பல்லக்கில் சென்று வழிபாடு


மயிலாடுதுறையில் பழமையான தருமபுரம் ஆதீன மடம் உள்ளது. இந்த மடத்தில் ஆதி குரு முதல்வர் குரு ஞானசம்பந்தரின் குருமூர்த்திகள் கையிலை ஞானப்பிரகாசர் குருபூஜைவிழா மற்றும் ஞானபுரீஸ்வரர் கோயில் பெருவிழா உள்ளிட்டவை ஆண்டுதோறும் வைகாசி மாதம் 11 நாட்கள் கொண்டாடப்பட்டு பட்டணபிரவேசம் நிகழ்ச்சி நடப்பது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் பெருவிழா தொடங்கியது. இன்று ஆதீன குரு முதல்வர் குருஞான சம்பந்தரின் குரு கையிலை ஞானப்பிரகாசர் குருபூஜை விழா தொடங்கியது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

ஆதின மரபு படி இன்று தருமை ஆதீனம் 27வது குருமுகா சன்னிதானம் ஸ்ரீல ஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் திருமடத்தில் இருந்து நாற்காலி பல்லக்கில் புறப்பட்டு மேலகுருமூர்த்தமான பூங்காவில் உள்ள ஐந்து குருமகா சன்னிதானங்களின் குருமூர்த்தங்களுக்கு சென்று சிறப்பு வழிபாடு மேற்கொண்டார்.

ஆளில்லாத மேஜைக்கு மின் விசிறி, மின் விளக்கு; அலட்சியத்துக்கு பெயர்போன மயிலாடுதுறை!

குருவாக இருந்து மறைந்தவர்களை தரிசனம் செய்வதற்கு தற்போது பீடத்தில் இருக்கும் குருமகா சன்னிதானத்தை குருவாக பாவிப்பதால் நாற்காலி பல்லக்கில் அமரவைத்து குருமூர்த்தங்களுக்கு சென்று வழிபாடு செய்வது மரபு. அதனடிப்படையில் தருமை ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் நாற்காலி பல்லக்கில் சென்று வழிபாடு நடத்தினார்.
எழுத்தாளர் பற்றி
Poorani Lakshmanasamy

அடுத்த செய்தி