அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் வில்லியநல்லூர் ஊராட்சியில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த கூட்டத்தை புறக்கணித்த 15 துறை அதிகாரிகளால், கூட்டத்தை ஒத்தி வைப்பதாக அறிவித்துவிட்டு கூட்டத்தில் இருந்து மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் வெளியேறினார். கிராம ஊராட்சிகள் அளவில் மேற்கொள்ளப்பட வேண்டிய சாலை வசதி, இடுகாடு வசதி, ஆரம்ப சுகாதார நிலையம், குளங்களுக்கு தடுப்புச் சுவர் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் தமிழக அரசின் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் செய்யப்படுகின்றன. ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் வருடத்திற்கு 12 கிராம ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு ஒவ்வொரு கிராமத்திற்கும் தலா நாற்பது லட்ச ரூபாய் செலவில் ஊராட்சி ஒன்றியம் மூலமாக பணிகள் மேற்கொள்ளப் படுகின்றன.
இதற்காக தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட திட்ட அலுவலர், ஊராட்சி ஒன்றிய அலுவலர் வளர்ச்சிப் பணிகள் ஆணையர், சுகாதாரத்துறை வேளாண் துறை உள்ளிட்ட 18 துறை அலுவலர்கள் கிராம மக்களுடன் கலந்துரையாடி பணிகளை தேர்வு செய்வது வழக்கம்.
அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
இதற்காக இன்று மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை ஒன்றியத்தை சேர்ந்த வில்லியநல்லூர் ஊராட்சியில் இதற்கான முகாம் நடைபெற்றது. காலை முதலே மயிலாடுதுறை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் மற்றும் ஊராட்சி ஒன்றிய ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் முகாமில் பங்கேற்று காத்திருந்தனர். நூற்றுக்கு மேற்பட்ட கிராம மக்களும் முகாமில் காத்திருந்த நிலையில் துறை அதிகாரிகள் யாரும் கலந்து கொள்ளாமல் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வேளாண் துறையை சார்ந்த வேளாண் உதவி அதிகாரி உள்ளிட்ட இருவர் மட்டுமே நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இதனால் ஒரு கட்டத்தில் வெறுப்படைந்த மயிலாடுதுறை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் மேடையிலேயே அதிகாரிகள் ஏன் வரவில்லை? தகவல் சொல்லவில்லையா என்று கேள்வி எழுப்பினார். தொடர்ந்து கூட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்துவிட்டு அவர் வெளியேறினார். அவரை பின்தொடர்ந்து சென்ற மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய வளர்ச்சி பணிகள் ஆணையர் திருமதி மீனா, ஏற்கனவே அனைத்து துறைக்கும் கடிதங்கள் அனுப்பப்பட்டு விட்டதாகவும் மீண்டும் ஒருமுறை கடிதம் அனுப்புவதாக தெரிவித்தார்.
13 கட்சிகள் ஒன்று சேர்ந்திருக்கிறது.. கோட்டைக்கு முதலமைச்சராக எடப்பாடி நிச்சயம் வருவார் - அடித்து சொல்லும் மாஜி அமைச்சர்!
அரசின் முக்கியமான திட்டங்களில் ஒன்றான அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தையே அதிகாரிகள் புறக்கணிக்க காரணம் என்ன என்று ஒன்றிய அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இன்னும் மூன்று மாதத்தில் இந்த நிதியாண்டு நிறைவடைய உள்ள நிலையில் அதிகாரிகள் வளர்ச்சி திட்டம் குறித்த ஆய்வுக் கூட்டத்தை புறக்கணிக்க காரணம் என்ன என்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்காக தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட திட்ட அலுவலர், ஊராட்சி ஒன்றிய அலுவலர் வளர்ச்சிப் பணிகள் ஆணையர், சுகாதாரத்துறை வேளாண் துறை உள்ளிட்ட 18 துறை அலுவலர்கள் கிராம மக்களுடன் கலந்துரையாடி பணிகளை தேர்வு செய்வது வழக்கம்.
அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
இதற்காக இன்று மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை ஒன்றியத்தை சேர்ந்த வில்லியநல்லூர் ஊராட்சியில் இதற்கான முகாம் நடைபெற்றது. காலை முதலே மயிலாடுதுறை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் மற்றும் ஊராட்சி ஒன்றிய ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் முகாமில் பங்கேற்று காத்திருந்தனர். நூற்றுக்கு மேற்பட்ட கிராம மக்களும் முகாமில் காத்திருந்த நிலையில் துறை அதிகாரிகள் யாரும் கலந்து கொள்ளாமல் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வேளாண் துறையை சார்ந்த வேளாண் உதவி அதிகாரி உள்ளிட்ட இருவர் மட்டுமே நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இதனால் ஒரு கட்டத்தில் வெறுப்படைந்த மயிலாடுதுறை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் மேடையிலேயே அதிகாரிகள் ஏன் வரவில்லை? தகவல் சொல்லவில்லையா என்று கேள்வி எழுப்பினார். தொடர்ந்து கூட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்துவிட்டு அவர் வெளியேறினார். அவரை பின்தொடர்ந்து சென்ற மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய வளர்ச்சி பணிகள் ஆணையர் திருமதி மீனா, ஏற்கனவே அனைத்து துறைக்கும் கடிதங்கள் அனுப்பப்பட்டு விட்டதாகவும் மீண்டும் ஒருமுறை கடிதம் அனுப்புவதாக தெரிவித்தார்.
13 கட்சிகள் ஒன்று சேர்ந்திருக்கிறது.. கோட்டைக்கு முதலமைச்சராக எடப்பாடி நிச்சயம் வருவார் - அடித்து சொல்லும் மாஜி அமைச்சர்!
அரசின் முக்கியமான திட்டங்களில் ஒன்றான அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தையே அதிகாரிகள் புறக்கணிக்க காரணம் என்ன என்று ஒன்றிய அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இன்னும் மூன்று மாதத்தில் இந்த நிதியாண்டு நிறைவடைய உள்ள நிலையில் அதிகாரிகள் வளர்ச்சி திட்டம் குறித்த ஆய்வுக் கூட்டத்தை புறக்கணிக்க காரணம் என்ன என்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.