ஆப்நகரம்

வைத்தீஸ்வரன் கோவில் ஆனி கிருத்திகை வழிபாடு; தர்மபுரம் ஆதீனம் பங்கேற்பு!

வைத்தீஸ்வரன் கோவிலில் தருமபுரம் ஆதீனத்துக்கு உட்பட்ட தையல்நாயகி அம்பாள் உடனாகிய வைத்தியநாத சுவாமி கோயில் ஆனி மாத கிருத்திகை சிறப்பு வழிபாடு நடந்தது.

Curated byPoorani Lakshmanasamy | Samayam Tamil 27 Jun 2022, 4:50 pm

ஹைலைட்ஸ்:

  • வைத்தீஸ்வரன் கோவில் ஆனி மாத கிருத்திகை வழிபாடு
  • 51 வகை நறுமண திரவியப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம்
  • தருமபுரம் ஆதீனம் பங்கேற்பு
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil வைத்தீஸ்வரன் கோவில் ஆனி கிருத்திகை வழிபாடு
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன் கோவிலில் தருமபுரம் ஆதீனத்துக்கு உட்பட்ட தையல்நாயகி அம்பாள் உடனாகிய வைத்தியநாத சுவாமி கோயில் உள்ளது. பிரசித்திப்பெற்ற இக்கோயிலில் செல்வமுத்துக்குமாரசாமி, செவ்வாய்க்கு அதிபதியான அங்காரகன் தனி சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர்.
இக்கோயிலில் ஆனி மாத கிருத்திகை சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக கிருத்திகை மண்டபம் எழுந்தருளிய செல்வமுத்துக்குமார சுவாமிக்கு பால், இளநீர், தேன், தயிர், பஞ்சாமிர்தம், பன்னீர், சந்தனம் முதலான 51 வகை நறுமண திரவியப் பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

எடப்பாடிக்கு கூடும் பலம்.. அடி மேல் அடி வாங்கும் ஓபிஎஸ்.. தீயாய் வேலை செய்யும் முன்னாள் அமைச்சர்!

தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சண்முகா அர்ச்சனை நடைபெற்று, மகா தீபம் காட்டப்பட்டது. இதில் தருமபுரம் ஆதீனம் 27ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த ஸ்வாமிகள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து பக்தர்களுக்கு அருட்பிரசாதம் வழங்கினார்.
எழுத்தாளர் பற்றி
Poorani Lakshmanasamy

அடுத்த செய்தி