ஆப்நகரம்

முஸ்லிம்களுக்கு பிரச்சனை?; கவனம் பெற்ற ஆர்ப்பாட்டம்!

போராட்டம் நடத்திய முஸ்லிம்கள் விடுத்துள்ள கோரிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Samayam Tamil 4 Dec 2021, 8:30 pm
மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகம் அருகில் சின்னக்கடை வீதியில் மயிலாடுதுறை மாவட்ட வட்டார ஜமாஅத் மற்றும் அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Samayam Tamil முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்
முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்


அப்போது ஆயுள் சிறைவாசிகள் தண்டனை காலம் முடிவடைந்தும் விடுதலை செய்யப்படாத சிறைவாசிகளை விடுதலை செய்ய தமிழக அரசை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அப்துல் சாதிக் தலைமையில் நடைபெற்ற கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தண்டனை காலம் முடிவடைந்தும் சிறையில் உள்ளவர்களை உடனடியாக விடுதலை செய்யக்கோரி முழக்கமிட்டனர்.

வாலிபர் இதயத் துடிப்பை மீட்ட நர்ஸ்; மறுவாழ்வு தந்தவருக்கு பாராட்டுகள்!

இந்த போராட்டத்தில் முன்னாள் சிறைவாசி கோவை நாசர் எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயலாளர் அபூபக்கர் சித்திக் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் கண்டன உரையாற்றினார்கள். இதில் 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

அடுத்த செய்தி