ஆப்நகரம்

3 மாவட்ட மீனவர்கள் முக்கிய தீர்மானம்; தமிழக அரசுக்கு கெடு விதித்து வார்னிங்!

மூன்று மாவட்ட மீனவர்கள் திடீரென ஒன்றுகூடி முக்கிய தீர்மானம் ஒன்றை நிறைவேற்றினர். இதை நிறைவேற்ற கோரி தமிழக அரசுக்கு கெடு விதித்துள்ளனர்.

Samayam Tamil 7 Dec 2021, 9:07 pm
நாகையில் ஒரு சில கிராமங்களில் மீனவர்கள் அரசினால் தடை செய்யப்பட்ட மீன்பிடி வலைகளையும், ஸ்பீடு எஞ்சினையும் பயன்படுத்தி தொடர்ந்து கடலில் மீன் பிடித்து வருகின்றனர். இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Samayam Tamil மீனவர்கள் ஆலோசனை கூட்டம்
மீனவர்கள் ஆலோசனை கூட்டம்


இவற்றை தடுக்க கோரி பல முறை அரசிற்கும், அரசுத் துறை அதிகாரிகளுக்கும் எடுத்துக் கூறியும் யாரும் கண்டுகொள்ளவில்லை என்று மீனவர்கள் சரமாரியாக குற்றம்சாட்டுகின்றனர்.

இந்த சூழலில் நாகை, மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் மாவட்ட மீனவர்கள் சார்பில் அக்கரைப்பேட்டையில் ஆலோசணைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான மீனவர்கள் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில், இந்த மாதம் 24ம் தேதிக்குள் ஸ்பீடு எஞ்சினை தடை செய்யவில்லை என்றால் 27ம் தேதி ஒட்டுமொத்த மீனவர்களை கூட்டி பல்வேறு மாவட்டங்களில் சாலை மறியல் நடத்தப்படும்.

ரேஷன் அதிகாரிகள் தகவல்; கார்டுதாரர்கள் திகைப்பு!

யார் தடுத்தாலும் எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை வாபஸ் பெற மாட்டோம் என்று நாகை, மயிலாடுதுறை காரைக்கால் மாவட்ட மீனவர்கள் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

அடுத்த செய்தி