மயிலாடுதுறை பரிமள ரங்கநாதர் கோயிலுக்கு சொந்தமான 6876 சதுர அடி பரப்பளவு கொண்ட நிலத்தை ரூபி இன் சார்லஸ் என்பவருக்கு குத்தகைக்கு விடப்பட்டிருந்தது. ஆனால் அந்த நிலத்தை வணிகப் பயன்பாட்டிற்கு மாற்றி கட்டிடம் கட்டி மோட்டார் தொழில் கூடம் அமைத்து ஆக்கிரமிப்பு செய்வது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து ரூபின் சார்லஸ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்கு இந்து சமய அறநிலையத்துறை மயிலாடுதுறை இணை ஆணையர் நீதிமன்றத்தில் சட்டப்பிரிவு 78 கீழ் வெளியேற்றி வழக்கினை கோயில் நிர்வாகம் சார்பில் தொடரப்பட்டது. தொடர்ந்து ரூபின் சார்லஸை கோயில் நிலத்தில் இருந்து வெளியேற்றுவதற்கு உத்தரவு பிறக்கப்பட்டது.
அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
தொடர்ந்து ரூபின் சார்லஸ் கோவில் இடத்திலிருந்து வெளியேறுவதற்கு 15 நாட்களுக்கு முன்னதாக முறையான அறிவிப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் அவர்கள் இடத்தை விட்டு வெளியேறாததை அடுத்து மயிலாடுதுறை இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் மோகனசுந்தரம் உத்தரவின் படி உதவி ஆணையர் முத்துராமன் தலைமையிலான அறநிலையத்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க முற்பட்டனர்.
அப்போது ரூபின் சார்லஸ் மனைவி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் அவர்களின் ஆதரவு வக்கீல்கள் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகளை தடுத்து நிறுத்தினர்.
அதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது .தொடர்ந்து போலீசார் பாதுகாப்புடன்ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் நிலத்தை மீட்டு சீல் வைத்தனர். மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு ஒரு கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
தொடர்ந்து ரூபின் சார்லஸ் கோவில் இடத்திலிருந்து வெளியேறுவதற்கு 15 நாட்களுக்கு முன்னதாக முறையான அறிவிப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் அவர்கள் இடத்தை விட்டு வெளியேறாததை அடுத்து மயிலாடுதுறை இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் மோகனசுந்தரம் உத்தரவின் படி உதவி ஆணையர் முத்துராமன் தலைமையிலான அறநிலையத்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க முற்பட்டனர்.
அப்போது ரூபின் சார்லஸ் மனைவி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் அவர்களின் ஆதரவு வக்கீல்கள் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகளை தடுத்து நிறுத்தினர்.
அதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது .தொடர்ந்து போலீசார் பாதுகாப்புடன்ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் நிலத்தை மீட்டு சீல் வைத்தனர். மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு ஒரு கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.