ஆப்நகரம்

பல்லவராயன் பேட்டை ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் தேர் திருவிழா; திரளான பக்தர்கள் தேர் இழுத்து வழிபாடு!

பிரசித்தி பெற்ற பல்லவராயன் பேட்டை ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் தேர் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

Curated byPoorani Lakshmanasamy | Samayam Tamil 5 Oct 2022, 5:43 pm

ஹைலைட்ஸ்:

  • பல்லவராயன் பேட்டையில் புகழ்பெற்ற ஸ்ரீனிவாச பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது
  • பிரம்மோற்சவம் கடந்த 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வந்தது
  • திரளான பக்தர்கள் பங்கேற்று திருத்தேர் வடம் பிடித்து இழுத்து வழிபாடு செய்தனர்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
பல்லவராயன் பேட்டை ஸ்ரீனிவாச பெருமாள் ஆலய திருத்தேர் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று திருத்தேர் வடம் பிடித்து இழுத்து வழிபாடு செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த பல்லவராயன் பேட்டையில் புகழ்பெற்ற ஸ்ரீனிவாச பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் ஆண்டு பிரம்மோற்சவம் கடந்த 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வந்தது.

தேவூர் ஸ்ரீ தேவதுர்க்கை அம்மன் கோவில் மகாசண்டி யாகம்; திரளான பக்தர்கள் பங்கேற்பு!

இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் பவனி இன்று காலை துவங்கியது. இதில் ஸ்ரீனிவாச பெருமாள் தாயாருடன் திருத்தேருக்கு எழுந்தருளினார். அங்கு மகா தீபாரதனைக்கு பிறகு தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

முக்கிய வீதிகள் வழியே நடைபெற்ற தேரோட்டம் இறுதியாக ஆலயத்தை வந்தடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.‌
எழுத்தாளர் பற்றி
Poorani Lakshmanasamy

அடுத்த செய்தி