ஆப்நகரம்

வீட்டில் தாய் சடலம் புதைப்பு; மகனிடம் போலீஸ் விசாரணை!

வீட்டுக்குள் தாய் சடலத்தை புதைத்த மகனிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Samayam Tamil 23 Jun 2022, 9:36 pm
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த புதுப்பட்டினம் திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் இந்திராணி (65). இவரது மகன் பிரபாகரன் (35). கடந்த 3 ஆண்டுகளாக பிரபாகரன் மனநலம் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே இருந்து வருகிறார்.
Samayam Tamil சம்பவம் நடந்த வீடு
சம்பவம் நடந்த வீடு


இவர்கள் தங்களுக்கு சொந்தமான கூரை வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த இந்திராணி நேற்று முதல் காணவில்லை என கூறப்படுகிறது.

இன்றும் அவர் வீட்டில் இருந்து வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அருகில் வசிப்பவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது அங்கிருந்த அறையில் ஒரு குழி தோண்டப்பட்டு மூடப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

பற்ற வைத்த ஓபிஎஸ்.. பதறிய பாஜக; பரபரப்பு கிளப்பும் பின்னணி தகவல்!

இதனால் சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் புதுப்பட்டினம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் அங்கு மண்ணைத் தோண்டி பார்த்தபோது அதற்குள் இறந்த நிலையில் இந்திராணியை சடலமாக கிடந்தது தெரிய வந்தது.

போலீஸ் விசாரணையில் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த இந்திராணி இறந்த நிலையில் என்ன செய்வது என்று தெரியாத மனநலம் பாதிக்கப்பட்ட மகன் பிரபாகரன் வீட்டிற்குள்ளேயே குழிதோண்டி தாயின் உடலை புதைத்தது அதன் அருகிலேயே அமர்ந்து இருந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து இந்திராணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் அவரது மகனிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த செய்தி