ஆப்நகரம்

முன்விரோதம் கம்பியால் இளைஞர்களைக் கொடூரமாகத் தாக்கிய போலீஸ்காரர்: சீர்காழி போலீசார் களத்தில் இறங்கினர்!

சீர்காழியில் முன்விரோத தகராற்றில் காவலர் கம்பியால் தாக்கியதில் படுகாயமடைந்த இருவர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Samayam Tamil 13 Sep 2021, 5:20 pm
சீர்காழியில் முன்விரோத தகராற்றில் காவலர் தாக்கியதில் படுகாயமடைந்த இருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதல் தொடர்பாகக் குற்றம்சாட்டப்பட்ட காவலரிடம் சீர்காழி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Samayam Tamil முன்விரோதம் கம்பியால் இளைஞர்களைக் கொடூரமாகத் தாக்கிய போலீஸ்காரர்: சீர்காழி போலீசார் களத்தில் இறங்கினர்!


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஈசானிய தெரு பகுதியைச் சேர்ந்தவர் தனசேகரன். வயது 35. இவர் வைதீஸ்வரன் கோவில் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார்.

தனசேகரன் உறவினர்களுக்கும் அதே பகுதியில் உள்ள பன்னீர்செல்வம் நகரைச் சேர்ந்த தேவேந்திரன் மகன் பிரதீப்(20) என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இதுதொடர்பாக மூன்று மாதங்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டு சமாதானமாகச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் பிரதீப் அவரது உறவினரான கொண்டத்தூர், தெற்கு பண்டாரவடை கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் மகன் அமிர்தராஜ்(35) என்பவருடன் வந்து தனசேகரன் உறவினர் வீட்டில் தகராற்றில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

கொரோனாவாவது... கிரோனாவாவது... எங்களுக்கு விழாதான் முக்கியம்... பாஜகவினர் அடம்!
இது குறித்து தகவல் அறிந்த காவலர் தனசேகரன் விரைந்து சென்று பிரதீப் மற்றும் அமிர்தராஜ் ஆகியோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இரு தரப்பிற்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த காவலர் தனசேகரன் கட்டை மற்றும் கம்பியால் பிரதீப், அமிர்தராஜ் உள்ளிட்ட 2 பேரைக் கடுமையாகத் தாக்கியுள்ளார். இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து காயமடைந்தவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு, சிகிச்சைக்காகச் சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இச்சம்பவம் குறித்து சீர்காழி போலீசார் வழக்குப் பதிந்து காவலர் தனசேகரனிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அடுத்த செய்தி