ஆப்நகரம்

இது தான் பொங்கல்; அணைக்கவும் செய்யும் போலீஸ்!

உலகமே பொங்கல் கொண்டாடி மகிழும் நேரத்தில் போலீசார் குடும்பங்களை மறந்து நடத்திய பொங்கல் விழா பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Samayam Tamil 14 Jan 2022, 7:11 pm
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயிலில் காவல் துறை சார்பில் வீடுகள் இன்றி சாலையோரம் வசிக்கும் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.
Samayam Tamil பொங்கல் கொண்டாடும் போலீஸ்
பொங்கல் கொண்டாடும் போலீஸ்



செம்பனார்கோவில் மயிலாடுதுறை சாலையில் சாலையோரம் வீடுகள் இன்றி 20க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ரேஷன் அட்டை உள்ளிட்ட எந்த ஆவணங்களும் கிடையாது என்பதால் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு கிடைக்கவில்லை.

உதயநிதி ஸ்டாலின் பதிலடி; பெட்டி பாம்பாய் அடங்கிய பிரஸ்!

இந்நிலையில் அந்த குடும்பங்களை காவல் நிலையத்திற்கு அழைத்து, பொங்கல் வைப்பதற்கு தேவையான அரிசி, வெல்லம், கரும்பு ஆகிய பொருட்களை காவல் ஆய்வாளர் செல்வி தலைமையில் செம்பனார்கோவில் காவல் துறை அதிகாரிகளும், காவலர்களும் தங்கள் சொந்த செலவில் வழங்கினார்கள்.

ஓபிஎஸ்சை நெருங்கும் போலீஸ்; அதிமுகவில் திடீர் பரபரப்பு!

கடந்த தீபாவளி அன்று இனிப்பு மற்றும் பட்டாசுகளை இவர்களுக்கு இதுபோல் காவல் துறையினர் வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவர்களது மனித நேயம் பலரது கவனத்தையும் ஈர்த்து உள்ளது.

அடுத்த செய்தி