ஆப்நகரம்

ரேஷன் அரிசியில் வளைந்து நெளிந்த புழுக்கள்; மக்கள் அதிர்ச்சி!

ரேஷன் அரிசியில் புழுக்களும், பூச்சிகளும் நெளிந்து ஓடியதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கார்டுதாரர்கள், அரிசியைத் தூக்கி சாலையில் வீசி போராட்டத்தில் குதித்தனர். இதை அறிந்து போலீசார் மற்றும் ரேஷன் அதிகாரிகள் ஓடி வந்து பொதுமக்களிடம் சமரசம் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Samayam Tamil 21 Jan 2022, 7:50 am
மயிலாடுதுறை அருகே ரேஷன் கடையில் தரமற்ற அரிசி வழங்கப்பட்டதை கண்டித்து, அரிசி மூட்டைகளை ஏற்றி வந்த லாரியை பொதுமக்கள் சிறை பிடித்து, தரமற்ற அரிசியை சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் தரமற்ற அரிசி வழங்கப்படுவதாக கூறி பொதுமக்கள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மயிலாடுதுறை அருகே சித்தமல்லி கிராமத்தில் உள்ள காலனி தெரு ரேஷன் கடையில் 800க்கும் மேற்பட்ட ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர்.

இவர்களுக்கு அரசு அறிவித்த பொங்கல் பரிசு தொகுப்பு தரமற்ற முறையில் வழங்கப்பட்டதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி இருந்தனர். இது தொடர்பாக பொதுமக்கள் அதிகாரிகளிடம் புகார் அளித்து பொங்கலுக்குப் பின் தரமான அரிசி வழங்கப்படும் என அவர்கள் உறுதி அளித்து இருந்ததாக கூறப்படுகின்றது.

பள்ளிக்கு உடனே வர உத்தரவு; மாணவ, மாணவிகள் ஹேப்பி!

தொடர்ச்சியாக தரமற்ற அரிசி பொங்கல் முடிந்த பிறகும் வழங்கப்பட்டதால் ரேஷன் கடைக்கு அரிசி மூட்டைகளை ஏற்றி வந்த லாரியை பொதுமக்கள் மறித்து சிறைபிடித்தனர் .

ரேஷன் கடையில் வழங்கப்பட்ட புழுக்கள் நிறைந்த தரமற்ற அரிசி மற்றும் ரேஷன் பொருட்களை பொதுமக்கள் சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். உணவுக்கு கூட பயன்படுத்த முடியாத தரமற்ற ரேஷன் பொருட்களை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, உடனடியாக தரமான அரிசி மற்றும் மளிகை பொருட்கள் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோஷங்களை எழுப்பினர்.

114 கோடியில் பிரமாண்டமாய் கலெக்டர் ஆபிஸ்… அடிக்கல் நாட்டினார் முதல்வர் ஸ்டாலின்!

தகவலறிந்து வந்த காவல்துறையினர் மற்றும் வட்ட வழங்கல் துறை அதிகாரிகள் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் தரமான அரிசி மற்றும் பொருட்கள் வழங்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் பொதுமக்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர்.

அடுத்த செய்தி