மயிலாடுதுறை காவல் நிலையத்தில் 16 வயது சிறுமி காணாமல் போனது தொடர்பாக நேற்று அளிக்கப்பட்ட புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி, இன்று காவல் நிலையம் அருகே உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே ஆனந்த குடியைச் சேர்ந்த 16 வயது சிறுமி மயிலாடுதுறையில் உள்ள டைலரிங் கடையில் வேலை செய்து வருகிறார். கடந்த 30 ஆம் தேதி வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இச்சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் நேற்று 1ம்தேதி மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமையை தேடி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று அளிக்கப்பட்ட புகார் மீது நடவடிக்கை எடுத்து சிறுமியை கண்டுபிடித்து தர வில்லை என்று கூறி காவல் நிலையத்தை கண்டித்து, காவல் நிலையம் அருகே மயிலாடுதுறை கும்பகோணம் சாலையில் சிறுமியின் உறவினர்கள் மற்றும் கிராமமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் சிறையில் 3வது நாளாக உண்ணாவிரதம்; சவுக்கு சங்கருக்கு உடல் நலம் பாதிப்பு.. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சிறுமி பேருந்து நிலையத்தில் நிற்பதும், பேருந்தில் அமர்ந்துள்ள சிசிடிவி பதிவுகளை காண்பித்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் நேற்று கொடுத்த புகாருக்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்று உடனடியாக (மறுநாள்) போராட்டத்தில் ஈடுபடலாமா என்று போலீசார் கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து மயிலாடுதுறை டிஎஸ்பி வசந்தராஜ் சம்பவ இடத்திற்கு வந்து காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக உறுதியளித்ததன் பேரில் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கலைந்து சென்றனர்.
இந்நிலையில் நேற்று அளிக்கப்பட்ட புகார் மீது நடவடிக்கை எடுத்து சிறுமியை கண்டுபிடித்து தர வில்லை என்று கூறி காவல் நிலையத்தை கண்டித்து, காவல் நிலையம் அருகே மயிலாடுதுறை கும்பகோணம் சாலையில் சிறுமியின் உறவினர்கள் மற்றும் கிராமமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் சிறையில் 3வது நாளாக உண்ணாவிரதம்; சவுக்கு சங்கருக்கு உடல் நலம் பாதிப்பு.. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை!
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சிறுமி பேருந்து நிலையத்தில் நிற்பதும், பேருந்தில் அமர்ந்துள்ள சிசிடிவி பதிவுகளை காண்பித்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் நேற்று கொடுத்த புகாருக்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்று உடனடியாக (மறுநாள்) போராட்டத்தில் ஈடுபடலாமா என்று போலீசார் கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து மயிலாடுதுறை டிஎஸ்பி வசந்தராஜ் சம்பவ இடத்திற்கு வந்து காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக உறுதியளித்ததன் பேரில் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கலைந்து சென்றனர்.