ஆப்நகரம்

தம்பி..அடங்கு...உனக்கு கொரோனா; தர்ணாவை ஆப் செய்த அதிகாரிகள்!

வாலிபருக்கு கொரோனா இருப்பதாகவும், இல்லை என்றும் கூறி அலைக்கழித்ததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாலிபர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவரது சான்றிதழ்களை வாங்கி பார்த்த அதிகாரிகள் அவருக்கு கொரோனா இருப்பதாக மீண்டும் கூறி 108 ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Samayam Tamil 9 Sep 2021, 6:32 pm
வாலிபருக்கு கொரோனா இருப்பதாகவும், இல்லை என்றும் கூறி அலைக்கழித்ததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாலிபர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவரது சான்றிதழ்களை வாங்கி பார்த்த அதிகாரிகள் அவருக்கு கொரோனா இருப்பதாக மீண்டும் கூறி 108 ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Samayam Tamil குடும்பத்துடன் போராட்டம் நடத்திய வாலிபர்
குடும்பத்துடன் போராட்டம் நடத்திய வாலிபர்


மயிலாடுதுறை மாவட்டம் நாஞ்சில்நாடு பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் கடந்த மாதம் 30ஆம் தேதி உடல்நிலை சரியில்லை என கூறி மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

இதை தொடர்ந்து அவருக்கு கொரோனா பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் மாரிமுத்துவிற்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்தபோது அவருக்கு தொற்று இல்லை என தெரிய வந்ததாக கூறப்படுகிறது.

அரசு பள்ளியில் மாணவி பலி... சக மாணவர்கள் பீதி!

இந்நிலையில் வீட்டிற்கு திரும்பிய மாரிமுத்துவிற்கு உடல்நலம் மேலும் பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா இல்லாத நபருக்கு தொற்று உள்ளது எனக் கூறி அலைக்கழித்த நகராட்சி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க கோரி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக குடும்பத்தினருடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிள்ளையார்பட்டி விநாயகர்; புகழ் அறிவோம் வாருங்கள்!

இதையடுத்து அங்கு வந்த அதிகாரிகள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் அவருடைய மருத்துவ சான்றிதழ்களை அதிகாரிகள் வாங்கி பார்த்தபோது மாரிமுத்துவிற்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

முதல்வர் ஸ்டாலின் வெறும் பேச்சு தான்... வெடிக்கும் பாஜக!

இதையடுத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், அதிகாரிகள் சிகிச்சையை பெறும்படி அறிவுரை கூறினர். மேலும் உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைத்து அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அடுத்த செய்தி