ஆப்நகரம்

சேலம் போலீசார் மீது கொலை வழக்கு; மாற்று திறனாளிகள் திடீர் கோரிக்கை!

காவலர்கள் தாக்கியதால் மாற்றுத்திறனாளி இறந்ததாக கூறப்படும் விவகாரத்தில் சேலம் போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Samayam Tamil 18 Jan 2022, 7:27 pm
சேலம் மாவட்டம் கருப்பூர் பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பிரபாகரன் மற்றும் அவரது மனைவியை கடந்த 10ம் தேதி திருட்டு வழக்கில் காவல் துறையினர் கைது செய்து நாமக்கல் கிளை சிறையில் அடைத்தனர்.
Samayam Tamil மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்


பின்னர் உடல் நலம் குன்றி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிரபாகரன் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து சேந்தமங்கலம் காவல் நிலையத்தில் பணியாற்றும் மூன்று காவலர்களை அரசு பணியிடை நீக்கம் செய்தது.

இச்சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி மயிலாடுதுறையில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 20க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.

ராஜேந்திர பாலாஜி புது ரூட்டு; இனி தான்.. ஆட்டமே ஆரம்பம்!

இந்த ஆர்ப்பாட்டத்தில் சேந்தமங்கலம் காவல் நிலையத்தில் காவலர்களால் தாக்கப்பட்டு பிரபாகரன் உயிரிழந்ததாகவும், சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகள் மீது அரசு கொலை வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

அடுத்த செய்தி