ஆப்நகரம்

சாதித்து காட்டிய பழங்குடி மாணவர்கள்; குத்துச்சண்டை போட்டியில் வெண்கலம்!

சாதித்து காட்டிய பழங்குடி இன மாணவர்களை பார்த்து சக மாணவ மாணவிகள் வியந்து போய் உள்ளதோடு, மகிழ்ந்து பாராட்டுகின்றனர்.

Samayam Tamil 12 May 2022, 7:39 pm
மயிலாடுதுறை மாவட்டம், பல்லவராயன் பேட்டையில் நரிக்குறவர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உண்டு உறைவிடப்பள்ளி செயல்பட்டு வருகின்றது.
Samayam Tamil பதக்கம் வென்றவர்கள்
பதக்கம் வென்றவர்கள்


இந்த பள்ளியில் பயிலும் நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த ஆறு மாணவர்கள், மாணவிகள் கடந்த மே 1ம் தேதி தஞ்சாவூரில் நடைபெற்ற மண்டல அளவிலான குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்றுள்ளனர்.

இதில் சப் ஜூனியர் பிரிவில் போட்டியிட்ட மாணவர்கள் ஒரு தங்கப் பதக்கத்தையும், 5 வெள்ளிப் பதக்கத்தையும் குவித்து மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.

மாணவியை கட்டி போட்ட மாணவர்கள்; ஆடைகளை அவிழ்த்து அத்துமீறல்!

இதை தொடர்ந்து புதுக்கோட்டையில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் கோவை மதுரை சேலம் திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போட்டியில் பங்கேற்ற நரிக்குறவ இனத்தைச் சேர்ந்த மாணவி தனலட்சுமி 54 முதல் 56 கிலோ எடைப் பிரிவிலும், வெண்ணிலா 36 முதல் 38 கிலோ எடை பிரிவிலும் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளனர்.

இதனிடையே வெற்றிப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் பெற்றோர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். தொடர்ந்து, தேசிய அளவிலான நடைபெறும் போட்டியில் பங்கேற்று பல பதக்கங்களை வெல்வோம் என மாணவிகள் நம்பிக்கையோடு தெரிவித்துள்ளனர்.

கொளுத்திய திருமாவளவன்; கொந்தளிக்கும் மத்திய அரசு!

புறந்தள்ளப்படும் சமுதாயமாக கூறப்பட்டு வரும் நிலையில் பழங்குடியின மாணவ மாணவிகள் பதக்கம் வென்று சாதனை படைத்து இருப்பது சக மாணவ மாணவிகள் மத்தியில் புதிய உற்சாகத்தை கொடுத்துள்ளது.

இதற்கிடையே பள்ளி மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் உடனடியாக விளையாட்டு மைதானத்தை அமைத்துத் தர வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

அடுத்த செய்தி