மயிலாடுதுறை மாவட்டம் மூவலூர் வடக்கு தெரு பகுதியை சேர்ந்தவர் ராஜலிங்கம். இவரது மகன் ராஜ்குமார் (20) கட்டுமான பணியில் சித்தாளாக வேலை செய்து வந்தார். அவரை கடந்த அக்டோபர் 29ஆம் தேதி மயிலாடுதுறை சித்தர் காடு தெற்கு வீதியை சேர்ந்த குருமூர்த்தி என்பவர் மகன் கபிலன் (22) என்பவரும் குத்தாலம் மகாதானபுரம் பகுதியை சேர்ந்த 17 வயது பள்ளி மாணவரும் சேர்ந்து கொலை செய்துள்ளனர்.
அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
ராஜ்குமாரின் உடல் மஞ்சளாறு ரயில்வே தண்டவாளத்தில் கிடந்துள்ளது. அந்த பகுதியாக சென்ற மக்கள் இளைஞரின் சடலம் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின் வேறு காவல் துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
முதலில் அந்த இளைஞர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாரா என ஆய்வு செய்தபோது காவல் துறையினருக்கு அந்த இளைஞரை யாரோ கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது. அது குறித்து மயிலாடுதுறை இருப்புப் பாதை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
மேலும் விசாரணை மேற்கொண்டு கபிலன் மற்றும் 17 வயது பள்ளி மாணவனையும் காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் அவர்கள் இருவரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அந்த விசாரணையில் பள்ளி மாணவருக்கும் கபிலனுக்கும் இடையே ஓரினச் சேர்க்கை பழக்கம் இருந்து வந்துள்ளது. அவர்கள் இருவரும் ராஜ்குமாருக்கும் மது கொடுத்து அவரையும் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட கட்டாயப்படுத்தி உள்ளனர்.
அதற்கு ராஜ்குமார் மறுப்பு தெரிவித்து அவர்களது எண்ணத்திற்கு ஒத்துழைக்காமல் இருந்துள்ளார். அதில் ஆத்திரமடைந்த இருவரும் அவரை கடுமையாக தாக்கி கொலை செய்தது அம்பலமானது.
அந்த விசாரணைக்கு பின்னர் காவல் துறையினர் கபிலனை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். அந்த 17 வயது பள்ளி மாணவர் கூர்நோக்கு பள்ளிக்கு அனுப்பப்பட்டார்.
அதைத்தொடர்ந்து தற்போது சிறையில் இருக்கும் கபிலன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க இருப்பு பாதை காவல் கண்காணிப்பாளர் அதிவீரபாண்டியன் பரிந்துரை செய்தார். அந்த பரிந்துரையின் பெயரில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா, கபிலனை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அந்த உத்தரவை தொடர்ந்து கபிலன் திருச்சி மத்திய சிறையில் குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்கப்பட்டார்.
அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
ராஜ்குமாரின் உடல் மஞ்சளாறு ரயில்வே தண்டவாளத்தில் கிடந்துள்ளது. அந்த பகுதியாக சென்ற மக்கள் இளைஞரின் சடலம் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து காவல் துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்த தகவலின் வேறு காவல் துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
முதலில் அந்த இளைஞர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாரா என ஆய்வு செய்தபோது காவல் துறையினருக்கு அந்த இளைஞரை யாரோ கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது. அது குறித்து மயிலாடுதுறை இருப்புப் பாதை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
மேலும் விசாரணை மேற்கொண்டு கபிலன் மற்றும் 17 வயது பள்ளி மாணவனையும் காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் அவர்கள் இருவரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அந்த விசாரணையில் பள்ளி மாணவருக்கும் கபிலனுக்கும் இடையே ஓரினச் சேர்க்கை பழக்கம் இருந்து வந்துள்ளது. அவர்கள் இருவரும் ராஜ்குமாருக்கும் மது கொடுத்து அவரையும் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட கட்டாயப்படுத்தி உள்ளனர்.
அதற்கு ராஜ்குமார் மறுப்பு தெரிவித்து அவர்களது எண்ணத்திற்கு ஒத்துழைக்காமல் இருந்துள்ளார். அதில் ஆத்திரமடைந்த இருவரும் அவரை கடுமையாக தாக்கி கொலை செய்தது அம்பலமானது.
அந்த விசாரணைக்கு பின்னர் காவல் துறையினர் கபிலனை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். அந்த 17 வயது பள்ளி மாணவர் கூர்நோக்கு பள்ளிக்கு அனுப்பப்பட்டார்.
அதைத்தொடர்ந்து தற்போது சிறையில் இருக்கும் கபிலன் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க இருப்பு பாதை காவல் கண்காணிப்பாளர் அதிவீரபாண்டியன் பரிந்துரை செய்தார். அந்த பரிந்துரையின் பெயரில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா, கபிலனை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அந்த உத்தரவை தொடர்ந்து கபிலன் திருச்சி மத்திய சிறையில் குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்கப்பட்டார்.