ஆப்நகரம்

நாகை: இதுக்கெல்லாமா ஊர விட்டு ஒதுக்கி வைப்பீங்க? பாதிக்கப்பட்டவர்கள் கண்ணீர் மல்க மனு...!

பெருங்கடம்பனூரில் நற்பணிக் கழகம் என்ற அமைப்பில் இருந்து விலகியதால் 3 குடும்பங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்டவர்கள் கண்ணீர் மல்க மனு அளித்துள்ளனர்.

Samayam Tamil 10 May 2023, 9:33 am

ஹைலைட்ஸ்:

  • நற்பணிக் கழகத்திலிருந்து விலகியதால் ஊரை விட்டு ஒதுக்கி வைப்பு
  • மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க மனு
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்
பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேலூர் அருகே பெருங்கடம்பனூர் ஊராட்சி மாரியம்மன் கோவில் தெரு பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
நற்பணி கழகத்தில் இருந்து விலகல்

இக்கிராமத்தில் நற்பணி கழகம் என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பில் இருந்து சோமசுந்தரம், செல்வம், குப்புசாமி உள்ளிட்ட மூன்று குடும்பங்கள் இந்த அமைப்பின் செயல்பாடுகள் பிடிக்காததால் விலகியதாக கூறப்படுகிறது.

இதனால் இவர்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாகவும், கல்யாணம், இறப்பு போன்றவற்றில் கலந்து கொள்ளக் கூடாது எனக் கூறியுள்ளனர்.

ஆட்சியரிடம் மனு

இந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் நேற்று மாவட்ட ஆட்சியர் அருண் தம்பிராஜியிடம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க மனு அளித்துள்ளனர்.

எந்த நிகழ்விலும் பங்கேற்க முடியவில்லை

இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறியதாவது: சுமார் மூன்று ஆண்டுகளாக எங்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளனர். இதனால் ஊரில் நடைபெறும் கல்யாணம், இறப்பு உள்ளிட்ட நிகழ்வுகளில் பங்கேற்க முடியவில்லை.

உறவினர்கள் மற்றும் யாராவது இறந்தாலும் கூட இறுதி சடங்குக்கு செல்லக்கூடாது என்றும், ஊரில் திருமணம் மற்றும் சுப காரியங்கள் நடைபெற்றால் குடும்பத்தில் உள்ளவர்கள் கலந்து கொள்ளக் கூடாது என நற்பணிக் கழகத்தின் சார்பாக கூறுகின்றனர்.

வாய்மொழி உத்தரவு

100 நாள் வேலைக்கு செல்லும் போது எங்களிடம் யாரும் பேசக்கூடாது என்று வாய்மொழி உத்தரவு போட்டு உள்ளனர்.

மன உளைச்சல்

ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதால் எங்கள் மூன்று குடும்பத்தினரும் மற்றும் குழந்தைகளும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி வருகிறோம். இதுகுறித்து ஏற்கனவே இரண்டு முறை கீழ்வேளூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
சிட்டிசன் படத்தில் வரும் அத்திபட்டி போல நிஜத்தில் ஒரு கிராமமா? அடிப்படை வசதிகள் இல்லாததால் மக்கள் வேதனை...!
மிரட்டல்

இதைப்போல் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள சோமசுந்தரம் என்பவரது சகோதரர் கஜேந்திரன் என்பவர் இறந்த பொழுது அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள சென்றபோது இடுகாட்டிற்கு வரக்கூடாது என மிரட்டல் விடுக்கப்பட்டது.

பத்திரிகை வைப்பதற்கும் தடை

மேலும் மீறி ஊரில் வேறு நபர்கள் திருமணம் மற்றும் சடங்கு சம்பந்தமான பத்திரிகை வைக்க சென்றால் அதற்கும் தடை வைத்துள்ளதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

எனவே இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ்.,யிடம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்துள்ளனர்.

அடுத்த செய்தி