40000 ஏக்கர் சம்பா பயிர்கள் பாதிப்பு: நாகப்பட்டினம் மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட 40000 ஏக்கர் சம்பா பயிர்களுக்கு இழப்பீடு வழங்க மத்திய சிறப்பு குழு அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தென்கிழக்கு வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த 31ம் தேதி மதியம் முதல் விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது. கடல் தொடர்ந்து சீற்றத்துடன் காணப்படுகிறது. நாகப்பட்டினம் துறைமுகத்தில் மூன்றாவது நாளாக ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 1ம் தேதி நள்ளிரவு முதல் கன மழை பெய்து வருகிறது. இதனால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகப்பட்டினம், திருமருகல், கீழ்வேளூர், திருக்குவளை, விழுந்தமாவடி, திருப்பூண்டி உள்ளிட்ட இடங்களில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த சம்பா பயிர்கள் பாதிப்படைந்துள்ளது.
தொடர்ந்து மழை பெய்வதால் வயல்களில் மழை நீர் தேங்கி, அறுவடை இயந்திரங்கள் வயல்களில் இறங்க முடியாத நிலை உள்ளது. அதே போல் அறுவடை செய்த சம்பா பயிர்களை காயவைக்க முடியாத நிலையில் விவசாயிகள் உள்ளனர். இந்த நிலையில் தொடர் மழையால் பாதித்த சம்பா பயிர்களை கணக்கெடுப்பு செய்ய மத்திய அரசு சிறப்பு குழுவை அனுப்பி வைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
விவசாயிகள் வேதனை:
இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, "நாகப்பட்டினம் மாவட்டத்தில் 1 லட்சத்து 30 ஆயிரம் ஏக்கரில் சம்பா பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் 20 ஆயிரம் ஏக்கரில் அறுவடை செய்யப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள ஏக்கரில் சம்பா பயிர்கள் சாகுபடிக்கு தயார் நிலையில் இருந்தது. இந்நிலையில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து மழை பெய்வதால் வயல்களில் மழை நீர் தேங்கி அறுவடை செய்ய முடியாத நிலை உள்ளது. அறுவடை செய்த நெல்லையும் காயவைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மழை நீர் பலஆயிரம் ஏக்கரில் சூழ்ந்துள்ளது. இன்னும் மழை நீடித்தால் அதிக அளவில் பாதிப்பு ஏற்படும்.
தொடர் கனமழையால் பாதித்த நெற்பயிரை கணக்கெடுப்பு செய்ய மத்திய அரசு தனியாக குழு ஒன்றை ஏற்படுத்தி ஆய்வு செய்ய வேண்டும். சம்பா பயிர்கள் அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் உளுந்து பயிர் சாகுபடி செய்ய முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனால் ஈரப்பதம் அளவை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்தி நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும்".
இது குறித்து வேளாண் இணை இயக்குநர் ஜாக்குலாஅகண்டராவ் கூறியதாவது: "நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பெய்த மழையால் 15 சதவீதம் நெற்பயிர்கள் பாதிப்படைந்துள்ள கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. மழை பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.
புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடர்: ஸ்கூல் யூனிஃபார்மில் வந்த திமுக எம்எல்ஏக்கள்.. சட்டசபையில் கலகல..!
மேலும் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்மண்டலம், கடல் சீற்றம் காரணமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 25மீனவ கிராமம் மீனவர்கள் 4வது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் படகுகளை பாதுகாப்பாக கரையில் நிறுத்தி வைத்துள்ளனர்.
4வது நாளாக மீனவர்களுக்கு தொடரும் தடை:
வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லக்கூடாது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து கடல் சீற்றம் காரணமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 25 மீனவ கிராம மீனவர்கள் 4வது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் உள்ளனர்.
குறிப்பாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் அக்கரைப்பேட்டை, கீச்சாங் குப்பம், கல்லார், புஷ்பவனம், வெள்ளபள்ளம், ஆறுகாட்டுதுறை, கோடியக்கரை மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் தங்களுக்கு சொந்தமான விசைப்படகுகள், பைபர் படகுகள் மற்றும் நாட்டுப் படகுகளை கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். 700 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவில்லை. மழைக்காலம் துவங்கியதிலிருந்து மழை மற்றும் புயல் எச்சரிக்கை காரணமாக பலமுறை இதேபோல மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தற்பொழுதும் மூன்று நாட்களாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாததால் வாழ்வாதாரம் இழந்து தவிப்பதாகவும், அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தென்கிழக்கு வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த 31ம் தேதி மதியம் முதல் விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது. கடல் தொடர்ந்து சீற்றத்துடன் காணப்படுகிறது. நாகப்பட்டினம் துறைமுகத்தில் மூன்றாவது நாளாக ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 1ம் தேதி நள்ளிரவு முதல் கன மழை பெய்து வருகிறது. இதனால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகப்பட்டினம், திருமருகல், கீழ்வேளூர், திருக்குவளை, விழுந்தமாவடி, திருப்பூண்டி உள்ளிட்ட இடங்களில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த சம்பா பயிர்கள் பாதிப்படைந்துள்ளது.
தொடர்ந்து மழை பெய்வதால் வயல்களில் மழை நீர் தேங்கி, அறுவடை இயந்திரங்கள் வயல்களில் இறங்க முடியாத நிலை உள்ளது. அதே போல் அறுவடை செய்த சம்பா பயிர்களை காயவைக்க முடியாத நிலையில் விவசாயிகள் உள்ளனர். இந்த நிலையில் தொடர் மழையால் பாதித்த சம்பா பயிர்களை கணக்கெடுப்பு செய்ய மத்திய அரசு சிறப்பு குழுவை அனுப்பி வைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
விவசாயிகள் வேதனை:
இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, "நாகப்பட்டினம் மாவட்டத்தில் 1 லட்சத்து 30 ஆயிரம் ஏக்கரில் சம்பா பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் 20 ஆயிரம் ஏக்கரில் அறுவடை செய்யப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள ஏக்கரில் சம்பா பயிர்கள் சாகுபடிக்கு தயார் நிலையில் இருந்தது. இந்நிலையில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து மழை பெய்வதால் வயல்களில் மழை நீர் தேங்கி அறுவடை செய்ய முடியாத நிலை உள்ளது. அறுவடை செய்த நெல்லையும் காயவைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மழை நீர் பலஆயிரம் ஏக்கரில் சூழ்ந்துள்ளது. இன்னும் மழை நீடித்தால் அதிக அளவில் பாதிப்பு ஏற்படும்.
தொடர் கனமழையால் பாதித்த நெற்பயிரை கணக்கெடுப்பு செய்ய மத்திய அரசு தனியாக குழு ஒன்றை ஏற்படுத்தி ஆய்வு செய்ய வேண்டும். சம்பா பயிர்கள் அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் உளுந்து பயிர் சாகுபடி செய்ய முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனால் ஈரப்பதம் அளவை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்தி நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும்".
இது குறித்து வேளாண் இணை இயக்குநர் ஜாக்குலாஅகண்டராவ் கூறியதாவது: "நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பெய்த மழையால் 15 சதவீதம் நெற்பயிர்கள் பாதிப்படைந்துள்ள கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. மழை பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.
புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தொடர்: ஸ்கூல் யூனிஃபார்மில் வந்த திமுக எம்எல்ஏக்கள்.. சட்டசபையில் கலகல..!
மேலும் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்மண்டலம், கடல் சீற்றம் காரணமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 25மீனவ கிராமம் மீனவர்கள் 4வது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் படகுகளை பாதுகாப்பாக கரையில் நிறுத்தி வைத்துள்ளனர்.
4வது நாளாக மீனவர்களுக்கு தொடரும் தடை:
வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லக்கூடாது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து கடல் சீற்றம் காரணமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 25 மீனவ கிராம மீனவர்கள் 4வது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் உள்ளனர்.
குறிப்பாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் அக்கரைப்பேட்டை, கீச்சாங் குப்பம், கல்லார், புஷ்பவனம், வெள்ளபள்ளம், ஆறுகாட்டுதுறை, கோடியக்கரை மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் தங்களுக்கு சொந்தமான விசைப்படகுகள், பைபர் படகுகள் மற்றும் நாட்டுப் படகுகளை கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். 700 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவில்லை. மழைக்காலம் துவங்கியதிலிருந்து மழை மற்றும் புயல் எச்சரிக்கை காரணமாக பலமுறை இதேபோல மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தற்பொழுதும் மூன்று நாட்களாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாததால் வாழ்வாதாரம் இழந்து தவிப்பதாகவும், அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.