ஆப்நகரம்

நாகையில் நடைபெற்ற பிரம்மாண்ட தனியார் வேலை வாய்ப்பு முகாம்; 978 பேர் தேர்வு!

நாகையில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்ற பிரமாண்ட தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.

Curated byPoorani Lakshmanasamy | Samayam Tamil 28 Jan 2023, 5:03 pm
தமிழ்நாட்டில் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தர தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதன்படி தமிழ்நாடு முழுவதும் இதுவரை 71 ஆயிரம் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, ஒரு லட்சத்து 14 ஆயிரம் இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கணேசன் தெரிவித்து இருந்தார்.
Samayam Tamil நாகையில் நடைபெற்ற பிரம்மாண்ட தனியார் வேலை வாய்ப்பு முகாம்
நாகையில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்ற பிரமாண்ட தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.


மேலும் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று பரவல் காரணமாக வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்படாமல் இருந்ததும் குறிப்பிடத்தக்கது. இதனால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலை வாய்ப்பின்றி தவித்து வந்தனர்.


இதனை அடுத்து தமிழகத்தில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில், ஒவ்வொரு மாதமும் இரண்டு முறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதில் பல்வேறு முன்னணி நிறுவனங்களும் பங்கேற்று, தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான தகுதியான ஊழியர்களை தேர்வு செய்து வருகின்றனர்.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

அந்த வகையில் நாகையில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்ற பிரமாண்ட தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. ராயல் என்ஃபீல்டு, டாட்டா, ஆதித்யா பிர்லா உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களில் பணியாற்ற இளைஞர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்தனர்.

நாகை மாவட்டம் பாப்பாக்கோவில் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பிரமாண்ட தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் இன்று நடைபெற்றது. மகளிர் திட்டம் சார்பாக நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமை தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் ஷாநவாஸ், நாகை மாலி, தமிழக தாட்கோ தலைவர் மதிவாணன் உள்ளிட்டோர் பங்கேற்ற முகாமில் ஆர்வத்துடன் இளைஞர்கள் கலந்துகொண்டனர்.

கரூர் கலெக்டர் அலுவலகத்தில் சிற்றுண்டி பரிமாறிய சிறுவன்; பொதுமக்கள் ஷாக்!

முகாமில் நாகை, திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்திருந்த இளைஞர்கள் ராயல் என்ஃபீல்டு, டாட்டா, ஆதித்யாபிர்லா உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்களில் பணியாற்ற ஆர்வத்துடன் விண்ணப்பித்தனர். நாகை மாவட்டத்தில் 3488 நபர்கள் , அருகாமையில் உள்ள மாவட்டத்தை சேர்ந்த 186 நபர்கள் என 3674 நபர்கள் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்றனர். இதில் 978 நபர்கள் பணிபுரிய தேர்வு செய்யப்பட்டு, அதில் 439 நபர்களுக்கு உடனடியாக பணியானை வழங்கப்பட்டது. தொடர்ந்து ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு சமுதாய முதலீட்டு நிதியில் இருந்து PMAY திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கு 33 நபர்களுக்கு 14 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் நிதி உதவியை நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் வழங்கினார்.
எழுத்தாளர் பற்றி
Poorani Lakshmanasamy

அடுத்த செய்தி