ஆப்நகரம்

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் குருத்தோலை பவனி; ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!

புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு சிறப்பு திருப்பலியில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

Curated byPoorani Lakshmanasamy | Samayam Tamil 2 Apr 2023, 12:48 pm
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறையொட்டி சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு மனமுருகி பிரார்த்தனை நடத்தினர்.
Samayam Tamil வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் குருத்தோலை பவனி சிறப்பு திருப்பலி
புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு சிறப்பு திருப்பலியில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.


ஆரோக்கிய அன்னை பேராலயம்:

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. இந்தியாவில் கட்டப்பட்டு உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் 'பசிலிக்கா' என்னும் சிறப்பு அந்தஸ்து பெற்று இருப்பதும், வங்கக் கடலோரம் அமைந்து இருப்பதும் வேளாங்கண்ணி பேராலயத்தின் சிறப்பு அம்சமாகும். ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு வேளாங்கண்ணி பேராலயத்தில் கடந்த (பிப்ரவரி) 22-ந் தேதி முதல் தவகாலம் கடைபிடிக்கப்பட்டது.


நேர்த்தி கடன்:

ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படும் நாள் நெருங்குவதை அறிந்து உலக மக்களின் பாவங்களை போக்க உபவாசமிருந்து ஜெபித்தார். இந்த உபவாச காலத்தை நினைவு கூறும் வகையில் கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் 40 நாள் உபவாசம் இருப்பது தான் தவக்காலம் என அழைக்கப்படுகிறது. தவகாலம் தொடங்கும் நாள் சாம்பல் புதன் ஆகும். தவகாலத்தை
முன்னிட்டு பல்வேறு ஊர்களைச் சேர்ந்தவர்கள் பாதயாத்திரையாகவும், சைக்கிள் பேரணியாகவும் வேளாங்கண்ணி கோவிலுக்கு வந்து தங்களுடைய நேர்த்திக் கடனை செலுத்துகின்றனர்.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

குருத்தோலை ஞாயிறு:

ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு ஜெருசலேம் நகருக்குள் கழுதை மேல் அமர்ந்து வரும்போது மக்கள் தங்கள் கைகளில் குருத்தோலைகளை ஏந்தி வாழ்த்து பாடலை பாடினார்கள். இதை நினைவு கூறும் வகையில் நேற்று வேளாங்கண்ணி பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி பேராலயம் முன்பு சிறப்பு திருப்பலி பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் நடந்தது. தொடர்ந்து நடந்த குருத்தோலை பவனியில் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களைச் சேர்ந்த திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

சேலம் ஜவ்வரிசிக்கு புவிசார் குறியீடு.. 56 பொருட்களுடன் இந்தியாவில் தமிழகம் முதலிடம் பெற்று அசத்தல்..!

நாள் முழுவதும் திருப்பலி:

அப்போது அவர்கள் குருத்தோலைகளை கையில் ஏந்தியபடி கீர்த்தனைகள் பாடியவாறு பல்வேறு வீதிகள் வழியாக வலம் வந்தனர். இந்த பவனி பேராலயத்தின் பின் பகுதியில் நிறைவடைந்தது. குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு வேளாங்கண்ணி பேராலயத்தில் நேற்று நாள் முழுவதும் தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம், இந்தி,தமிழ் ஆகிய மொழிகளில் திருப்பலி நடந்தது. இதில் பங்குத்தந்தை அற்புதராஜ் பொருளாளர் உலகநாதன், உதவிப் பங்குத் தந்தையர்கள் டேவிட் தனராஜ் , ஆண்டோ ஜேசுராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
எழுத்தாளர் பற்றி
Poorani Lakshmanasamy

அடுத்த செய்தி