நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பாப்பாப்கோவில் பகுதியில் இருக்கும் கோயில் குளத்தில் தத்ரூபமாக தீயணைப்பு வீரர்களின் பேரிடர் மேலாண்மை குறித்த முன்னேற்பாடு பணிகள் மற்றும் மீட்பு ஒத்திகை நடைபெற்றது. அதனை தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் பிரபாகர் நேரில் சென்று ஆய்வு செய்தார். அவருடன் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளும் இருந்தனர். அந்த நிகழ்வில் ஐந்து 108 வாகனங்கள், 4 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டது. சைரன் சத்தம் ஒழிக்க அந்த நிகழ்ச்சி பரபரப்பாக நடைபெற்றது.
அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
அப்போது நீரில் மூழ்கியவர்களை ரப்பர் பழகு உள்ளிட்ட உபகரணங்கள் மூலம் காப்பாற்றுதல், வெள்ளத்தில் சிக்கியவர்களை லாவகமாக காப்பாற்றுதல் மற்றும் முதலுதவி சிகிச்சை அளித்தல் குறித்து தத்துரூபமாக விளக்கம் அளிக்கப்பட்டது.
அதோடு ரத்த காயங்களுடன் அடிபட்டவர்களை தூக்குதல், மூச்சுக்குழல் அடைப்பு ஏற்பட்டவருக்கு முதலுதவி அளிப்பது, வெள்ளத்தில் சிக்கியவர்களை கண்டுபிடித்து காயத்தின் தன்மைக்கு ஏற்றவாறு கைகளில் வண்ண ரிப்பன்களை கட்டுதல், போன்ற மீட்பு நடவடிக்கைகள் நிகழ்த்தப்பட்டன.
ஸ்கூபா போன்ற அதி நவீன மிதக்கும் கருவிகளை கொண்டு நடந்த ஒத்திகை நிகழ்ச்சியில் தண்ணீரில் தத்தளித்த கால்நடையை காப்பாற்றி கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பின்னர் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மையின் கீழ் நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஆப்தமித்ரா திட்டத்தின்கீழ் பயிற்சி அளிக்கப்பட்ட தன்னார்வலர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அவசர கால பெட்டக உபகரணங்களை வருவாய் நிர்வாக ஆணையர் பிரபாகர் ஆய்வு செய்தார்.
அதோடு ஒத்திகை நிகழ்வில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும் தன்னார்வளர்களை வெகுவாக பாராட்டினார். ஏராளமாக வாகனங்கள் சைரன் ஒளி எழுப்பி நடைபெற்ற ஒத்திகை நிகழ்ச்சியால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
அப்போது நீரில் மூழ்கியவர்களை ரப்பர் பழகு உள்ளிட்ட உபகரணங்கள் மூலம் காப்பாற்றுதல், வெள்ளத்தில் சிக்கியவர்களை லாவகமாக காப்பாற்றுதல் மற்றும் முதலுதவி சிகிச்சை அளித்தல் குறித்து தத்துரூபமாக விளக்கம் அளிக்கப்பட்டது.
அதோடு ரத்த காயங்களுடன் அடிபட்டவர்களை தூக்குதல், மூச்சுக்குழல் அடைப்பு ஏற்பட்டவருக்கு முதலுதவி அளிப்பது, வெள்ளத்தில் சிக்கியவர்களை கண்டுபிடித்து காயத்தின் தன்மைக்கு ஏற்றவாறு கைகளில் வண்ண ரிப்பன்களை கட்டுதல், போன்ற மீட்பு நடவடிக்கைகள் நிகழ்த்தப்பட்டன.
ஸ்கூபா போன்ற அதி நவீன மிதக்கும் கருவிகளை கொண்டு நடந்த ஒத்திகை நிகழ்ச்சியில் தண்ணீரில் தத்தளித்த கால்நடையை காப்பாற்றி கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பின்னர் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மையின் கீழ் நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஆப்தமித்ரா திட்டத்தின்கீழ் பயிற்சி அளிக்கப்பட்ட தன்னார்வலர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அவசர கால பெட்டக உபகரணங்களை வருவாய் நிர்வாக ஆணையர் பிரபாகர் ஆய்வு செய்தார்.
அதோடு ஒத்திகை நிகழ்வில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும் தன்னார்வளர்களை வெகுவாக பாராட்டினார். ஏராளமாக வாகனங்கள் சைரன் ஒளி எழுப்பி நடைபெற்ற ஒத்திகை நிகழ்ச்சியால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.