ஆப்நகரம்

கல்பனா சாவ்லா விருது பெற்ற வீரமங்கை - யார் இந்த எழிலரசி?

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே குளத்தில் மூழ்கிய 2 குழந்தைகளின் உயிரை துணிச்சலுடன் காப்பாற்றிய பெண்மணி எழிலரசிக்கு இந்தாண்டுக்கான வீர தீர சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 15 Aug 2022, 1:49 pm
நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் அருகே உள்ள அஞ்சுவட்டத்தம்மன் கோவிலில் தீர்த்தகுளம் ஒன்று உள்ளது. குளம் சரியாக பராமரிக்கப்படாமல் இருப்பதால் புதர் மண்டி காணப்படுகிறது. இந்த குளத்தில் கடந்த மே மாதம் 15-ஆம் தேதி அதே பகுதியை சேர்ந்த அரவிந்தன் என்பவரது இரு குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக இரண்டு குழந்தைகளும் குளத்தில் விழுந்து உயிருக்கு போராடினர்.
Samayam Tamil கல்பனா சாவ்லா விருது 2022


அப்போது அந்த வழியாக சென்ற எழிலரசி என்ற பெண் உடனடியாக குளத்தில் குதித்து 2 குழந்தைகளையும் கையில் ஏந்தி காப்பாற்றினார். ஆனால், குழந்தைகளை தூக்கிக்கொண்டு குளத்தை விட்டு வெளியேற முடியாததால் குளக்கரையின் ஓரத்திலேயே நின்றிருந்தார்.

பின்னர், உதவி செய்ய யாரேனும் வரும்படி சத்தம் போடவே அவ்வழியாக சென்ற சிலர் குளக்கரைக்கு சென்று குழந்தைகள் மற்றும் எழிலரசியை பாதுகாப்பாக மீட்டனர். உயிரை துட்சமென கருதி ஆபத்தில் இருந்த குழந்தைகளை காப்பாற்றிய எழிலரசிக்கு அப்பகுதி மக்கள் மட்டுமின்றி ஆட்சியர் உள்ளிட்ட அதிகரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

இதனிடையே, தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் சுதந்திர தின விழாவில் வீர தீர செயலுக்காக வழங்கப்படும் விருத்துக்கு இந்தாண்டு எழிலரசியின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது. அதனால், இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் எழிலரசிக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

அடுத்த செய்தி