ஆப்நகரம்

ஏன் குடிக்கவில்லை என வழக்கும் போடும் நிலை திமுக ஆட்சியில் உருவாகும் - ஓ.எஸ்.மணியன் விமர்சனம்

ஏன் மது அருந்தவில்லை என வழக்கு போடும் நிலை திமுக ஆட்சியில் உருவாகும் என முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் விமர்சனம் செய்துள்ளார்.

Written byபிரபாகர் B | Samayam Tamil 1 May 2023, 12:57 pm
நாகை மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் மின்சார வாரிய அலுவலகம் மற்றும் அரசு போக்குவரத்து கழக அலுவலகங்களில் மே தின விழா நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும் வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினருமான ஓஎஸ்.மணியன் தொழிற்சங்க பேரவை கொடியை ஏற்றி வைத்தார்.
Samayam Tamil os manian admk
os manian admk


விவசாய பணிகள் - வலியுறுத்தல்

மேலும் அரசு போக்குவரத்து கழக அண்ணா தொழிற்சங்க தொழிலாளர்கள் சார்பில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலையும் ஓஎஸ் மணியன் திறந்து வைத்து பழங்கள் மற்றும் இனிப்புகளை பொதுமக்களுக்கு வழங்கினார்.

இதனையடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கூறியதாவது, தமிழகத்தில் பெய்து வரும் கோடை மழை காரணமாக விவசாயிகள் மராமத்து பணி செய்வதில் சிரமம் உள்ளது. இதனை போக்குவதற்கு விவசாயிகளுக்கு தேவையான விதைகள், உரங்கள் இருப்பு வைக்க வேண்டும். ஜூன் 12-ம் தேதி நீர் திறக்க வேண்டும், தேவையான கொள் நெல் முதல் நிலையங்களை திறக்க வேண்டும்.
நாகை அருகே பயங்கரம்: டாட்டா ஏசி வாகனம் கவிழ்ந்து விபத்து...16 பேர் படுகாயம்!
திமுக ஆட்சி மீது குற்றச்சாட்டு

தமிழகத்தில் மதுபானம் எப்பொழுது, எங்கே வேண்டுமென்றாலும் எல்லா நேரத்திலும் எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம் என்ற கொள்கையை திமுக அரசு பிரகடனப்படுத்தி உள்ளது. மதுபானங்கள் பகலில் ஒரு விலை இரவில் இரண்டு மடங்கு விலை என விற்கப்படும் நிலையில் தற்போது கல்யாண வீடுகளிலும், விளையாட்டு மைதானங்களிலும் திருவிழாக்களிலும் 11 ஆயிரம் ரூபாய் பணம் கட்டி விட்டு மதுபானங்கள் விற்கலாம்.

தானியங்கி இயந்திரம் மூலமாகவும் மதுபான விற்பனையை திமுக அரசு தொடங்கியுள்ளது. மேலும் வாகனம் ஓட்டும்போது குடித்துள்ளார்களா என வழக்கு தொடுத்த காலம் போய் ஏன் குடிக்கவில்லை என வழக்கும் போடும் நிலை திமுக ஆட்சியில் உருவாகும். இவ்வாறு முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறினார்.
எழுத்தாளர் பற்றி
பிரபாகர் B
கணினி அறிவியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றவன். ஊடகத்துறையில் 4 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வருகிறேன். எழுத்தால் சமூகத்தில் பெரிய மாற்றத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்த முடியும் என்பதே எனது கருத்து. தற்போது சமயம் தமிழில் மாவட்ட செய்திகள் பிரிவில் பணியாற்றி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி