ஆப்நகரம்

திமுக நாகை மாவட்ட செயலாளராக கௌதமன் அறிவிப்பு; அமைச்சருடன் ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு!

திமுக நாகை மாவட்ட செயலாளராக அறிவிக்கப்பட்ட கௌதமனுக்கு திமுக தொண்டர்கள் மற்றும் அமைச்சர் மெய்யநாதன் சார்பில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

Curated byPoorani Lakshmanasamy | Samayam Tamil 30 Sep 2022, 6:11 pm

ஹைலைட்ஸ்:

  • திமுக நாகை மாவட்ட செயலாளராக கௌதமன் அறிவிப்பு
  • நாகை வந்த அவருக்கு தாரைதப்பட்டைகள் முழங்க தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
  • அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் பேரணியாக வந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட திமுக தொண்டர்கள்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil அமைச்சருடன் ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு
திராவிட முன்னேற்ற கழகத்தின் நாகை மாவட்ட பொறுப்பாளராக இருந்த கௌதமன் நாகை மாவட்ட செயலாளராக அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் நாகை வந்த அவருக்கு பிரமாண்ட மாலை மற்றும் கேக் வெட்டி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் அமைச்சர் தலைமையில் வெளிப்பாளையம் பகுதியில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் புடைசூழ பேரணியாக வந்த மாவட்ட செயலாளர் கௌதமன் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
கீழமூவர்கரை கிராம மக்கள் அதிரடி; பாராட்டிய சீர்காழி டிஎஸ்பி.. இதுதான் விஷயம்!

தொடர்ந்து கோட்டைவாசல் பகுதியில் உள்ள தந்தை பெரியார், புத்தூர் பகுதியில் உள்ள அண்ணா மற்றும் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த அவர்கள், கலைஞர் பிறந்த ஊரான திருக்குவளை இல்லத்தில் உள்ள கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள நாகை மாவட்ட செயலாளருக்கு அங்கு திரண்டிருந்த ஏராளமான திமுக தொண்டர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
எழுத்தாளர் பற்றி
Poorani Lakshmanasamy

அடுத்த செய்தி