ஆப்நகரம்

நாகையில் சிக்கிய தீவிரவாதி?; விரையும் உளவு அதிகாரிகள்!

நாகப்பட்டினம் கடற்படை முகாமுக்குள் வரைபடங்கள், திசை காட்டும் கருவி மற்றும் மின்னணு சாதனங்களுடன் நுழைந்த இளைஞர் தீவிரவாதியாக இருக்கலாம் என்கிற சந்தேகத்தில், அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Samayam Tamil 17 Jan 2022, 8:09 am
நாகப்பட்டினம் துறைமுகத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு விடுதலைப் புலிகள் ஊடுருவல், தீவிரவாதம், எரிபொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை தவிர்ப்பதற்காக இந்திய கடற்படை முகம் அமைக்கப்பட்டது.
Samayam Tamil கைது செய்யப்பட்டுள்ள நபர்
கைது செய்யப்பட்டுள்ள நபர்



இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் பணியாற்றி வருகின்றனர். இன்று அதிகாலை துறைமுகத்தின் பாதுகாப்பு சுவர்களைத் தாண்டி மர்ம நபர் ஒருவர் கடற்படை முகாமில் நுழைந்தார்.

ரேஷன் கார்டுக்கு ரூ.5 ஆயிரம்; விரைவில் வருகிறது அறிவிப்பு?

அப்போது கண்காணிப்பில் இருந்த கடற்படை வீரர்கள் அவரை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதன் காரணமாக அவர் தீவிரவாதியாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் பாதுகாப்பான இடத்தில் வைத்து அவரிடம் கடற்படை அதிகாரிகள் அதிரடியாக விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அவரிடம் இருந்த பையை கைப்பற்றி சோதனை செய்தபோது 6 (மேப்) வரைபடங்கள், திசை காட்டும் காம்பஸ் கருவி, அதிக அளவிலான பணம், மின்னணு சாதனங்கள் உள்ளிட்டவை அவர் பைகளில் இருந்தது.

தமிழகத்தில் அனுமதி இல்லை; போலீசார் அதிரடி நடவடிக்கை!

இதனையடுத்து உயரதிகாரிகளுக்கு தகவல் அளித்த கடற்படை வீரர்கள் நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து நாகப்பட்டினம் காவல் கண்காணிப்பாளர் ஜவகர் தலைமையிலான போலீசார், க்யூ பிரிவு போலீசார், கடலோர பாதுகாப்பு குழும போலீசார் உள்ளிட்டோர் பிடிபட்ட நபரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

முதற்கட்ட விசாரணையில் பிடிபட்ட நபர் உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த அபிஷேக் சுக்லா என்பது தெரிய வந்துள்ளது. மேலும் அவர் சுற்றுலா வந்ததாகவும், வேலை தேடி வந்ததாகவும், உணவு தேடி வந்ததாகவும், மாற்றி மாற்றி அவர்களிடம் தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

நிர்வாணப்படுத்தி ரசித்த போலீசார்?; சட்ட கல்லூரி மாணவர் குற்றச்சாட்டு!

இதனையடுத்து பிடிபட்ட நபர் மீது சந்தேகம் அதிகரித்துள்ளதால் இந்திய உளவு அமைப்பான ரா அமைப்பின் அதிகாரிகளுக்கு கடற்படை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து திருச்சியில் இருந்து ரா உளவு அமைப்பின் அதிகாரிகள் விரைந்துள்ளனர். கடந்த 8 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்று வரும் விசாரணையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உளவுப்பிரிவு அதிகாரிகள் விசாரணைக்கு பின் பிடிபட்ட அபிஷேக் சுக்லா பற்றிய முழு விவரம் தெரிய வரும் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த செய்தி