ஆப்நகரம்

சிலம்பக்கலை ஆசிரியர்களுக்கு ஒரு லட்சம்... அமைச்சர் அதிரடி அறிவிப்பு!

தமிழகத்தில் 100 சிலம்பக்கலை ஆசிரியர்கள் முறையாக தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

Curated byPoorani Lakshmanasamy | Samayam Tamil 11 Jun 2022, 4:17 pm

ஹைலைட்ஸ்:

  • நாகையில் சிலம்பம் உலக சாதனை நிகழ்ச்சி
  • அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்
  • தமிழகத்தில் 100 சிலம்பக்கலை ஆசிரியர்களுக்கு தலா ஒரு‌ லட்சம்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன்
நாகையில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் சுற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. கொளுத்தும் வெயிலில் சுமார் 300க்கும் மேற்பட்ட இளைஞர்கள், மற்றும் சிறுமிகள் கலந்து கொண்ட நிகழ்ச்சி, 5 மணி நேரம் நடைபெற்றது. உலக சாதனை நிகழ்ச்சியை தமிழக சுற்றுச் சூழல் துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். உடன் தமிழக மீன் வளர்ச்சிக் கழக தலைவர் கெளதமன் மற்றும் சிலம்பக்கலை பயிற்றுவிற்கும் ஆசிரியர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
குழந்தை மீது ஏறி இறங்கிய கார்... வைரலாகும் பகீர் வீடியோ!

இதில் கை அசராமல் இளைஞர்கள், சிலம்பக்கலை வீரர்களின் உலக சாதனை முயற்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சுற்றுச்சூழல் துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் விரைவில் தமிழகத்தில் 100 சிலம்பக்கலை ஆசிரியர்களை முறையாக தேர்வு செய்து தலா ருபாய் ஒரு லட்சம் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
எழுத்தாளர் பற்றி
Poorani Lakshmanasamy

அடுத்த செய்தி