ஆப்நகரம்

நாகப்பட்டினத்தில் ஏடிஎம் கொள்ளை வழக்கில் 25 வயது இளைஞர் கைது...கடன் தொல்லையால் கொள்ளையடிக்க முயற்சி!

நாகப்பட்டினம் வெளிப்பாளையத்தில் உள்ள கனரா வங்கி ஏடிஎம் கொள்ளை வழக்கில் 25 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். அதிக கடன் தொல்லையால் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Curated byDhivya Thangaraj | Samayam Tamil 19 Apr 2023, 4:49 pm

ஹைலைட்ஸ்:

  • கனரா வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளையடிக்க முயற்சி செய்த இளைஞர்
  • இரு சக்கர வாகனத்தை வைத்து குற்றவாளியை அடையாளம் கண்ட போலீசார்
  • அதிக அளவில் கடன் இருந்ததால் ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளை அடிக்க திட்டம்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
ஏடிஎம் கொள்ளை முயற்சி
நாகப்பட்டினம் வெளிப்பாளையம் பப்ளிக் ஆபீஸ் ரோட்டில் இயங்கி வரும் கனரா வங்கியில் கடந்த 10 ஆம் தேதி ஏடிஎம் மிஷினை உடைத்து கொள்ளை முயற்சி நடைபெற்றது.

குற்றவாளி தேடல்

இதில் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்த ஏழு லட்ச ரூபாய் தப்பியது. இது குறித்து வழக்கு பதிவு செய்த வெளிப்பாளையம் போலீசார் சிசிடிவி காட்சிகளை வைத்து குற்றவாளியை தேடி வந்தனர். மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் உத்தரவின் பெயரில் துணை காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளியை தீவிரமாக தேடி வந்தனர்.

குற்றவாளியை அடையாளம் கண்ட போலீசார்

குற்றவாளி பயன்படுத்திய இரு சக்கர வாகனத்தை வைத்து குற்றவாளியை போலீசார் அடையாளம் கண்டுபிடித்தனர். ஏடிஎம் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நபர் நாகப்பட்டினம் கொத்தான்குளம் பகுதியை சேர்ந்த 25 வயது இளைஞர் விஸ்வநாதன் என்பது தெரியவந்தது.

குற்றவாளி கைது

இதனையடுத்து அவரை போலீசார் தேடி வந்தனர். அப்போது வெளிப்பாளையம் காவல் நிலையம் அருகில் உள்ள டீக்கடையில் நின்றிருந்த நபரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டதை விஸ்வநாதன் ஒத்துக் கொண்டார்.
நாகையில் 4 பேர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம் - மாவட்ட ஆட்சியர் அதிரடி
கடன் தொல்லை

அதிக அளவிலான கடன் இருந்ததால் ஏடிஎம்மை கொள்ளை அடிக்க திட்டமிட்டதாக தெரிவித்து உள்ளார். அதிகாலை 2 மணிக்கு திட்டமிட்டு சென்றதாகவும், ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முடியாததால் இரண்டு மணி நேரம் ஏடிஎம்மில் உட்கார்ந்து அழுததாகவும், பொழுது விடிந்ததால் அங்கிருந்து கிளம்பி விட்டதாக தெரிவித்துள்ளார்.

தற்கொலை முயற்சி

ஏடிஎம் கொள்ளை முயற்சிக்கு பின் இரண்டு முறை தற்கொலை செய்து கொள்ள முயன்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து விஸ்வநாதனை நாகப்பட்டினம் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி நாகப்பட்டினம் மாவட்ட சிறையில் அடைத்தனர்.
எழுத்தாளர் பற்றி
Dhivya Thangaraj

அடுத்த செய்தி