ஆப்நகரம்

நாகப்பட்டினம் புயல் எச்சரிக்கை: சீற்றத்துடன் கடல்.. மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை..!

தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால், மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

Curated byPoorani Lakshmanasamy | Samayam Tamil 31 Jan 2023, 10:41 am

ஹைலைட்ஸ்:

  • தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது
  • இது நேற்று மதியம் தாழ்வு மண்டலமாக மாறியது
  • நாகப்பட்டினம் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil நாகப்பட்டினம் புயல் எச்சரிக்கை
தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால், மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாகை மாவட்டத்தில் புயல் சின்னம் காரணமாகவும், கடல் சீற்றத்துடன் காணப்படுவதாலும் 700 விசைப்படகுகள் மற்றும் 3000 பைபர் படகு மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.
தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது நேற்று மதியம் தாழ்வு மண்டலமாக மாறியது. இதனையடுத்து நாகப்பட்டினம் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.


இதனால் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அக்கரைப்பேட்டை நம்பியார்நகர் ஆரியநாட்டுத் தெரு, நாகூர், பட்டினச்சேரி, செருதூர், விழுந்தமாவடி, காமேஸ்வரம் ஆற்காட்டு துறை, கோடியக்கரை உள்ளிட்ட 25 மீனவ கிராமங்களைச் சேர்ந்த 700 விசைப்படகுகள் மற்றும் 3000க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் மீன்வளத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனால் துறைமுகங்களிலும், கடற்கரை ஓரங்களிலும் படகுகள் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

முன்னதாக நேற்று தொலைதூரத்தில் புயல் உருவாகியுள்ளதை குறிக்கும் வகையில் நாகை துறைமுகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இடிமின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி நாகை மாவட்டத்திற்கு உட்பட்ட பெரும்பாலான பகுதிகளில் நேற்று காலை முதலே மந்தமான வானிலை நிலவி வருகிறது. இந்நிலையில் தொலைதூரத்தில் புயல் உருவாகியுள்ளது என்பதை குறிக்கும் வகையில் நாகப்பட்டினம் துறைமுகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

புயல் எச்சரிக்கை காரணமாக கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் கரை திரும்பவும் அறிவுறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று புயல் எச்சரிக்கை காரணமாக நாகப்பட்டினம் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டு, அவர்களின் அன்றாட இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

ரேஷன் அரிசி கடத்தினால் இனிமே இதுதான் தண்டனை.. கூட்டுறவுத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடும் எச்சரிக்கை!

இதேபோல் தூத்துக்குடி வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு, மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல மீன்வளத் துறை சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே ஆள் கடலில் தங்கி மீன் பிடித்து வரும் விசைப்படகு மீனவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சொல்ல அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இதேபோல் ராமநாதபுரம் தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால், பாம்பன் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
எழுத்தாளர் பற்றி
Poorani Lakshmanasamy

அடுத்த செய்தி